கூத்தர்கூத்து என்பது நாடகம். கூத்தர் என்போர் நாடகம் ஆடுவோர். கூத்தர் பற்றிப் பண்டைய தமிழ்நூல்கள் தெரிவிக்கும் கருத்துகள் இவை. புறவாழ்க்கையில் கூத்தர் பங்குகூத்தர் ஆங்காங்கே களம் அமைத்துக்கொண்டு கூத்தாடுவர். [1] கூத்தாடும் அவர்களது அவைக்கு ஒவ்வொருவராக வருவர். கூத்து முடிந்ததும் ஒரே நேரத்தில் அனைவரும் சென்றுவிடுவர். [2] செங்குட்டுவன் கனக விசயரை வென்றபோது அவர்களின் பக்கம் இருந்து போரிட்டவர்கள் பல வகையான வேடமிட்டுக்கொண்டு போர்க்களத்திலிருந்து தப்பித்து ஓடினர். அந்த வேடங்களில் ஒன்று ஆடும் கூத்தர் வேடம். [3] உயிர் உடலில் ஆடும் கூத்தர் போல் விளையாடிவிட்டுப் போய்விடும். [4] புறத்திணை ஆற்றுப்படை நூல்களில் ஆற்றுப்படுத்தப்படும் மாந்தராக வருவர். [5] மலைபடுகடாம் நூலைக் கூத்தர் ஆற்றுப்படை எனவும் குறிப்பிடுவர். அகவாழ்க்கையில் கூத்தர் பங்குகற்புநிலை ஒழுக்கத்தில் கூத்தரின் பங்கு இன்னதெனத் தொல்காப்பியம் தொகுத்துக் காட்டுகிறது. [6] தலைவன் வேறொரு நாட்டுக்குச் சென்றிருக்கும்போது அவன் எப்படி இருக்கிறான் என்பதைக் கண்டுவந்து தலைவிக்குக் கூறுவர். [7]
அடிக்குறிப்புகள்காண்க
|
Portal di Ensiklopedia Dunia