கெம்பிளாஸ்ட் சன்மார்கெம்ப்ளாஸ்ட் சன்மார் லிமிடெட் என்பது தமிழ்நாட்டின் சென்னையை தளமாகக் கொண்ட ஒரு இரசாயன நிறுவனம் ஆகும். இது சன்மார் குழுமத்தின் ஒரு பகுதியாகும், இது இரசாயனம், கப்பல் சரக்கு, பொறியியல் மற்றும் உலோகம் ஆகியவற்றில் வணிகங்களைக் கொண்டுள்ளது. இது சுமார் 25 வணிகங்களில் ரூ .65 பில்லியனுக்கும் அதிகமான வருவாய் ஈட்டுகிறது, இதன் உற்பத்தி அலகுகள் இந்தியாவில் பல இடங்களில் பரவியுள்ளன.[1][2] தயாரிப்புகெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனத்தின் உற்பத்தி வசதிகள் தமிழ்நாட்டில் மேட்டூர், பண்ருட்டி, கடலூர் மற்றும் பொன்னேரி மகாராஷ்டிராவில் சினோலி, மற்றும் காரைக்கால் ஒன்றியப் பகுதியில் புதுச்சேரி . ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளது. இது பாலிவைனைல் குளோரைடு பிசின்கள், குளோரோ இரசாயனங்கள் மற்றும் குழாய் அமைப்புகளின் முக்கிய உற்பத்தியாளர் ஆகும். செப்டம்பர் 2009 இல் நியமிக்கப்பட்ட கடலூர் பாலிவினைல் குளோரைடு திட்டம் தமிழகத்தின் மிகப்பெரிய திட்டமாகும். இதன் மொத்த திறன் 235,000 டன், இது இந்தியாவின் மிகப்பெரிய பாலிவினைல் குளோரைடு தயாரிப்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.[3] விருதுகள்2010 டிசம்பரில் ஐதராபாத்தில் மத்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நீர் நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய 7 வது தேசிய விருதில் கெம்பிளாஸ்ட் சன்மார் லிமிடெட் இரண்டு விருதுகளை வென்றது. சன்மார் குழுமத்தின் முதன்மை நிறுவனம் "புதுமையான வழக்கு ஆய்வு" மற்றும் "சிறந்த நீர் திறன் பிரிவு" விருதுகளை வென்றது மேட்டூரில் பூஜ்ஜிய திரவ வெளியேற்றத்தின் வெற்றிகரமான வழக்கு ஆய்வுக்காக பெற்றது.[4] பூஜ்ஜிய திரவ வெளியேற்றத்தின் முன்னோடியான கெம்பிளாஸ்ட் சன்மார் தனது அனைத்து உற்பத்தி ஆலைகளிலும் இந்த செயல்முறையை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. கெம்பிளாஸ்ட் செப்டம்பர் 2009 முதல் மேட்டூரில் தனது ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட ஒரு துளி நீர் கூட வெளியேற்றவில்லை, அதே நேரத்தில் கடலூர் மற்றும் காரைக்காலில் ஆரம்பத்தில் இருந்தே வெளியேற்றம் இல்லை.[5] தனிப்பட்ட முதலீடுகள்கெம்பிளாஸ்ட் இந்தியா முழுவதும் முன்னேற்றங்களைக் கொண்டுள்ளது. இவை பின்வருமாறு: வரலாறு1962இல் பாலிவைனைல் குளோரைடு பிசின்கள், / சேர்மங்களை உற்பத்தி செய்வதற்கும் மற்றும் அதன் தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் நிறுவனத்தின் இணைத்தல் பணியில் இது தொடங்கியது. 1967இல் மேட்டூரில் உள்ள ஆலை பி.எஃப். குட்ரிச்சுடன் இணைந்து 6,000 டி.பி.ஏ. பி.வி.சி குழாய்களின் உற்பத்தியும் தொடங்குகிறது. பி.வி.சி குழாய்களை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முன்னோடிகளில் ஒன்றாக இருந்து வருகிறது. விளையாட்டுசன்மார் குழுமம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு துடுப்பாட்டத்தை ஆதரிக்க உதவியுள்ளது. கெம்பிளாஸ்ட் சன்மார் தமிழக துடுப்பாட்ட அகாதமி (டி.என்.சி.ஏ) 1 வது பிரிவில் ஜாலி ரோவர்ஸ் மற்றும் ஆல்வார்பேட்டை துடுப்பாட்ட அணியை ஆதரிக்கிறது.[6] தேசிய துடுப்பாட்ட அணிக்கு 30 க்கும் மேற்பட்ட வீரர்களை வழங்கிய ஒரே கூட்டு நிறுவனம் என்ற பெருமையை இது கொண்டுள்ளது. அவர்களில் முக்கிய மானவர்களான ரொபின் சிங், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், தினேஷ் கார்த்திக், லட்சுமிபதி பாலாஜி, பியூஷ் சாவ்லா, முனாஃப் படேல், ஆகியோர் அடங்குவர்.[2] முன்னாள் இந்திய குச்சக் காப்பாளர் பாரத் ரெட்டி, கடந்த 35 ஆண்டுகளாக கெம்பிளாஸ்ட் ஆதரவு அணிகளின் திறமையைக் கண்டுபிடித்து அதை வளர்ப்பதற்கான பொறுப்பில் உள்ளார்.[7] மேட்டூர்மேட்டூரில் அணையைச் சுற்றி அமைந்துள்ள ஒரு சிறிய நகரத்தில் கெபிளாஸ்ட் சன்மருக்கு ஐந்து அலகுகள் உள்ளன, மேட்டுர் அணை காவேரி நதி தமிழ்நாட்டிற்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துகிறது. இந்த நதி மாநில விவசாயத்தின் உயிர்நாடியாகும், மேலும் அதிக மக்கள் தொகை கொண்ட சேலம், திருச்சி, தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு நீர் வழங்குகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia