கே. கிருஷ்ணன்குட்டி
கே. கிருஷ்ணன்குட்டி (K. Krishnankutty) (பிறப்பு 13 ஆகத்து 1944) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கேரள அரசின் தற்போதைய மின்சாரத்துறை அமைச்சரும் ஆவார். [1][2] இவர் கேரள அரசின் சிற்றூர் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் [3] முன்னாள் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் ஆவார். இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசில் தொடங்கினார். 1969 ஆம் ஆண்டில் கேபிசிசி உறுப்பினராக ஜனதா தளத்தில் இணையும் வரை தொடர்ந்தார்.[4] இவர் கேரளா கூட்டுறவு இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் ஆவார்.[5] இவர் இதற்கு முன்பு பெருமாட்டி சேவை கூட்டுறவு வங்கியின் தலைவராகவும், பாலக்காடு மாவட்ட கூட்டுறவு வங்கி மற்றும் கேரள மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[4]இவர் கேரள சட்டமன்றத்தின் உறுப்பினராக 6 ஆம், 7 ஆம், 9 ஆம் மற்றும் 14 ஆம் அவைகளின் உறுப்பினர் ஆவார்.[4] இவர் பிணறாயி விஜயனின் அமைச்சரவையில், திருவல்லா சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மேத்யூ டி. தாமசிற்குப் பிறகு அமைச்சரானார்.[6] இவர் கேரளாவின் மதசார்பற்ற ஜனதா தளத்தின் மாநிலத் தலைவராக இருந்தார்.[7] இவர் குஞ்சுகுட்டி மற்றும் ஜானகி ஆகியோருக்கு பெருமாட்டியில் உள்ள எழுத்தாணியில் 1944 ஆம் ஆண்டு ஆகத்து 13 ஆம் நாள் பிறந்தார்.[8] இவர் தட்டாமங்கலத்தில் அரசு எஸ். எம். உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பினை முடித்தார்.[8] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia