கே. தமிழரசன்கே.தமிழரசன் (K.Tamilarasan) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். மதுரை மாவட்டம் மேலூர் தாலுக்காவில் உள்ள பத்தினெட்டாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவராவார். இவரது தந்தை பெயர் எசு.பி.காசி, தாயார் பெயர் கே.நல்லம்மாள். டி.அரசி என்பவரை மணந்த இவருக்கு திவாகர், ஆர்த்தி, ரகுல் என மூன்று குழந்தைகள் உள்ளனர். மதுரை கிழக்குசட்டமன்ற தொகுதியில் இருந்து தமிழ்நாட்டின் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1] 1996 ஆம் ஆண்டு பத்தினெட்டாங்குடி கிராம ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழரசன், தொடர்ந்து 2001 மற்றும் 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் அதே கிராமத்திற்கு ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழரசன் 99447 வாக்குகள் பெற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் போட்டியாளரான பி.மூர்த்தியை தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia