கே. பி. இராமச்சந்திரன் நாயர்
கே. பி. இராமச்சந்திரன் நாயர் (K. P. Ramachandran Nair) தேசிய ஜனநாயகக் கட்சியின் நிறுவனராவார். இவர், 01 செப்டம்பர் 1983 முதல் 29 மே 1985 வரை கேரள அமைசரவையில் சுகாதார அமைச்சராகவும் இருந்தார்.[3][4] இவர் டாக்டர் கே.பி. பணிக்கர் என்பவருக்கு 1 ஜனவரி 1922 இல் பிறந்தார்.[5] இவர் டி.ரத்தினம்மாவை மணந்தார்.[5] 28 பிப்ரவரி 2004 இல் இறந்தார்.[5] அரசியல் வாழ்க்கைஇராமச்சந்திரன், "நாயர் சேவை அமைப்பின்" செயல்பாடுகளுடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தார். ஒரு காலத்தில் அதன் பொருளாளராகவும் அதன் இயக்குநர் குழு உறுப்பினராகவும் இருந்தார்.[4] இந்திய தேசிய காங்கிரசு கட்சி மூலம் அரசியலில் நுழைந்த போதிலும், பின்னர் இவர் நாயர் சேவை அமைப்பின் அரசியல் பிரிவான தேசிய ஜனநாயகக் கட்சியை உருவாக்க உதவினார். இவர் 1968-79 வரை ஆழப்புழா நகராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.[3] 1982இல் கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பி. கே. வாசுதேவன் நாயரை 1590 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[6] 1991 கேரள மாநில சட்டசபை தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் சோமசேகரனை தோற்கடித்து 746 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[7] இரண்டு முறையும் இவர் ஆலப்புழா சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். கே. கருணாகரனின் மூன்றாவது அமைச்சகத்தில், இவர் 01 செப்டம்பர் 1983 முதல் 29 மே 1985 வரை சுகாதார அமைச்சராகப் பொறுப்பேற்றார்.[3] தேர்தல்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia