கைவல்ய நவநீதம்கைவல்ய நவநீதம் [1] என்பது ஒரு வேதாந்த மெய்யியல் தமிழ் நூல் ஆகும். தமிழ் அத்வைத நூல்களில் தலைசிறந்தது கைவல்ய நவநீதம் எனப்படுகிறது. இந்த நூல் 1500 களில் எழுதப்பட்டது.[2] இந்த நூலை நன்னிலம் நாராயண தேசிகரின் மாணவர் அருள் திரு தாண்டவராயர் இயற்றினார். இந்நூலில் சில நல்லாசியருக்கும், நன்மாணவனுக்கும் இடையே நிகழும் உரையாடலாகவும், ஒரு தந்தை மகனுக்கு அறிவுரை கூறுவது போலவும் எழுதப்பட்டுள்ளது. தத்துவ விளக்கப்படலம், சந்தேகம் தெளிதற் படலம் என்று இரு பெரும் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.[3] நூலின் சிறப்புஇந்நூல் பாயிரம் 7, தத்துவ விளக்கப்படலம் 101, சந்தேகம் தெளிதற் படலம் 185 ஆக மொத்தம் 293 பாடல்கள் கொண்டதாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலில் எழுசீர் ஆசிரியவிருத்தம் பத்து பாடல்கள் (231-240), எண்சீர் ஆசிரியவிருத்தம் பதினொன்று பாடல்கள் (123-133), அறுசீர் ஆசிரியவிருத்தம் 172 பாடல்கள் உள்ளன.[4] கைவல்ய நவநீதத்திற்கு தமிழில் பலர் விரிவுரை எழுதி இருந்தாலும், பிறையாறு ஸ்ரீ அருணாசல சுவாமிகள், ஈசூர் ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் மற்றும் சிதம்பரம் ஸ்ரீ பொன்னம்பல ஞானதேசிகர் (தத்துவார்த்த தீபம்) ஆகியோரது உரைகளே மிக பழமையானது, காலத்தால் முற்பட்டது, கருத்தாழத்தால் மேம்பட்டது. கடந்த நூற்றாண்டின் முற்பகுதியில் மஹாவித்வான் வடிவேலு செட்டியார், வினா விடை அமைப்பில், கைவல்ய நவநீதத்திற்கு விளக்க உரை எழுதிப் பதிப்பித்தார். 1933ல், ப்ருஹ்மஸ்ரீ திருமாநிலையூர் கோவிந்தய்யர் 'தாத்பர்ய தீபிகை' என்னும் உரையை எழுதி, தமிழ் மூலத்துடன், சங்கு கவிகளின் சமஸ்கிருத மொழிபெயர்ப்பையும், தன் உரையையும் ஒருங்கே பதிப்பித்தார். இந்த நூல் தமிழிலிருந்து திருக்குறளுக்கு அடுத்தபடியாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 1855 இல் டாக்டர் கார்ல்க்ரோல் என்ற ஜெர்மானியரால் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்தது.[5] கைவல்யனவனீதத்திர்க்கு ஸம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு் வந்துள்ளது. அதன் பெயரும்ʼ கைவல்யனவனீதம் என்றே ஆகும். ஶங்குகவி இதை இயற்றியிருக்கிறார். இம்மொழிப்பெயர்ப்பு , கிருஷ்ணப்ரியா[6] என்ற விளக்கவுரையுடன் வெளியிடப்பட்டுள்ளது.https://www.academia.edu/45223632/Introduction_to_Kaivalyanavan%C4%ABtam_of_%C5%9Aa%C5%84kukavi_Edited_with_%E0%A4%95%E0%A5%83%E0%A4%B7_%E0%A4%A3%E0%A4%AA_%E0%A4%B0%E0%A4%BF%E0%A4%AF%E0%A4%BE_commentary_ கைவல்ய நவநீதத்திற்கான ஆங்கில உரைகளில், சுவாமி ஸ்ரீ ரமணானந்த சரஸ்வதிகளின் ஆங்கில உரை மேலானதாகக் கருதப்படுகின்றது. கைவல்ய நவநீதம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷியால் சாதகர்க்குப் பரிந்துரைக்கப் பெற்றது. பாராயணத்துக்கான கைவல்ய நவநீதம் மூலமும், சிவ. தீனநாதனால் செய்யப்பட்ட உரைச்சுருக்கமும், ஸ்ரீ ரமணாச்ரமம் வெளியீடாகப் பதிப்பிடப்பட்டுள்ளது. ஸ்ரீ முனகல வெங்கடராமையாவின் ஆங்கில மொழிபெயர்ப்பும், அதிலிருந்து செய்யப்பட்ட தெலுங்கு மொழிபெயர்ப்பும் பதிப்பிடப்பட்டுள்ளன. நூல் தரும் சில செய்திகள்
அடிக்குறிப்பு
கருவிநூல்
|
Portal di Ensiklopedia Dunia