கொங்காடு குட்டிசங்கரன்
கஜராஜன் கொங்காடு குட்டிசங்கரன் (Kongad Kuttisankaran) (1962கள் - 26 ஜூலை 2020) என்பது கேரளாவின் பாலக்காடு, கொங்காட்டில் வாழ்ந்த ஒரு யானையாகும்.[1] [2] கேரளாவில் 300 செமீ உயரத்திற்கு மேல் பிறந்த சில யானைகளில் இதுவும் ஒன்று.[3] குட்டிசங்கரன், நிலம்பூர் வனப்பகுதியில் பிறந்தது.[4] மிக இளம் வயதிலேயே காட்டை விட்டு வெளியேற்றப்பட்டப் பிறகு, 1969இல் கொங்காடு திருமந்தம்குன்னு கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது.[5] அத்யன் தம்புரான், இபாகுல சக்கரவர்த்தி , கஜராஜன் ஆகிய பட்டங்களை பெற்றுள்ளது.[6] குட்டிசங்கரன் கேரள நாட்டுப்புறக் கதைகளில் மிகவும் பிரபலமான யானைகளில் ஒன்று.[7] மதங்கசாஸ்திரத்தைச் சேர்ந்த நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த யானை 18 நகங்கள், நீளாமான தும்பிக்கை, நீண்ட வால், அழகான கண்களால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.[8] குட்டிசங்கரன், திரிச்சூர் பூரம், நெம்மர வேளா, புதுச்சேரி வெடி, மன்னார்காட் பூரம் உள்ளிட்ட திருவிழாக்களில் வழக்கமாக இடம் பெற்றது.[9] இந்த யானை கடைசியாக மன்னார்காட் பூரத்தில் பங்கேற்றது. அதன் பிறகு வயது தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சைக்காகச் சென்றது. சில மாதங்கள் கழித்து, இது 26 பிப்ரவரி 2020 அன்று இறந்தது.[10] [11] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia