கொடுகொட்டி (இசைக்கருவி)கொடுகொட்டி என்பது தோற்கருவி வகை சார்ந்த தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது ஒரு வகைப் பறை எனும் முழவுக்கருவியாகும். இதனைப் பற்றிய குறிப்புகள் சிலப்பதிகாரத்திலும் தேவாரத்திலும் உள்ளன. நாகசுரக் கச்சேரிகளிலும் இடம்பெறுகிறது.[1] பிற பெயர்கள்கிடுகிட்டி, கிடிகிட்டி,கிரிகிட்டி என வெவ்வேறுவிதமாக இந்த இசைக்கருவி அழைக்கப்பட்டுள்ளது[2]. அமைப்புஇது இரு கருவிகள் இணைந்த இசைக்கருவி. அடியில் குறுகி, முகம் படர்ந்த இக்கருவிகள் இரண்டின் நடுப்புறமும் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கும்.[3] பொய்க்கால் ஆட்டம், பூம்பூம் மாட்டுக்காரர்கள் உறுமியிசை, மாட்டுகலியாணக் கூத்து போன்றவற்றில் இக் கருவி இசைக்கப்படுகிறது. கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள்[2]நாகப்பட்டணத்திற்கு அருகிலுள்ள கீழ்வேளுர் எனும் ஊரில் கேடிலியப்பர் எனும் கோயில் உள்ளது. இக்கோவிலின் வழிபாடுகளில் கிடிகிட்டி இசை முக்கிய இடம்பெற்றது. இதன்காரணமாக இவ்வூரில் கிடிகிட்டி வாத்தியக் கலைஞர்கள், தலைமுறைத் தலைமுறையாக வாழ்ந்து வந்துள்ளனர். சுப்பிரமணியப் பிள்ளை (1787 - 1846), சண்முகம் பிள்ளை (1835 - 1897), ராமையா பிள்ளை (1876 - 1955) எனும் தலைமுறைக் குடும்பக் கலைஞர்கள் குறிப்பிடத்தக்கோர். இவர்களுக்குப் பிறகு வந்த முத்துவீர் பிள்ளை, கோவிந்தராஜ பிள்ளை என்போருக்கு கிடிகிட்டி வாசிக்கத் தெரியும். எனினும், தவிலிசைக் கலைஞர்களாக இசைத் துறையில் இருக்கிறார்கள். கீவளூர் சுப்பராய பிள்ளை, பந்தணைநல்லூர் கோவிந்தபிள்ளை , தில்லையாடி ஸ்ரீநிவாச பிள்ளை ஆகியோர் வல்லுனர்களாக விளங்கியுள்ளனர். தேவாரத்தில் கொடுகொட்டி பற்றிய குறிப்புகள்
சான்றுகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia