கொடுமுடி மகுடேசுவரர் கோயில்
மகுடேசுவரர் கோயில் (திருப்பாண்டிக் கொடுமுடி) என்ற சிவன் கோயில், தமிழ்நாடு மாநிலத்தில் ஈரோடு மாவட்டத்தின் கொடுமுடி புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது பாடல் பெற்றது. சுந்தரர் நமச்சிவாயப் பதிகம் பாடிய தலமாகும். அமைவிடம்![]() இத்தலம் ஈரோடு மாவட்டத்தில் ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் கொடுமுடியில் உள்ளது. திருச்சி-ஈரோடு ரயில் பாதையில் கொடுமுடி ரயில் நிலையம் இருக்கிறது. கோவில் ரயில் நிலையத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. காவிரி ஆற்றின் கரைக்கருகில் இக்கோயில் உள்ளது. வடக்கிருந்து தெற்கு நோக்கி ஓடிவரும் காவிரி ஆறானது இவ் விடத்தில் கிழக்கு நோக்கி திசைமாறிச் செல்கிறது. மரபு வரலாறுஆதிசேடனுக்கும் வாயுவுக்கும் இடையில் ஏற்பட்ட போட்டியில் மேருமலை சிதறிவிழுந்த துண்டுகள் மணிகளாகச் சிதறியபோது அவற்றில் ஒன்று கொடுமுடியாகவும் ஆகிற்று என்பது தொன்நம்பிக்கை. இவ்வரலாற்றில் தொடர்புடைய தலங்கள்
வழிபட்டோர்அகத்தியர், திருமால், பிரம்ம தேவர், பரத்துவாஜர், மலையத்துவச பாண்டியர் மும்மூர்த்திகள்மகுடேசுவரர் கோயில் வளாகத்துக்குள், மகுடேசுவரர் சன்னிதிக்கும் வடிவுடையநாயகி சன்னிதிக்கு நடுவில், வீரநாராயணப் பெருமாள்-மகாலட்சுமி சன்னிதிகள் உள்ளன. மேலும் வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சன்னிதியும் அமைந்துள்ளது. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
படத்தொகுப்பு
|
Portal di Ensiklopedia Dunia