கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை
கொழும்பு சர்வதேச விமான நிலையம், இரத்மலானை (Colombo International Airport, Ratmalana, කොළඹ ජාත්යන්තර ගුවන්තොටුපළ, රත්මලාන) இலங்கை யின் பன்னாட்டு வானூர்தி சேவைகளுக்காகவும் மற்றும் இராணுவத் தேவைகளுக்காகவும் பாவிக்கப்படும் ஒரு வானூர்தி நிலையம் ஆகும். இது முன்னர் இலங்கையின் ஒரேயொரு பன்னாட்டு விமான நிலையமாக இருந்தது. இவ்வானூர்தி நிலையம் இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகரான இரத்மலானையில் அமைந்திருக்கிறது. 1934ஆம் ஆண்டில் அன்றைய இலங்கை அரசாங்க சபை இரத்மலானையில் வானூர்தி நிலையம் கட்டுவதற்கு முடிவெடுத்தது. நவம்பர் 27, 1935 அன்று முதலாவது வானூர்தி மதராசில் இருந்து வந்திறங்கியது. இரண்டாம் உலகப் போரின் போது இது பிரித்தானியாவின் ரோயல் வான்படையினரின் தளமாகப் பயன்பட்டது. ஜப்பானிய வானூர்திகளுக்கெதிரான பல தாக்குதல்களுக்கு இவ்விமான நிலையம் பயன்பட்டது. மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்தில் இருந்து இடைத்தங்கல் இல்லாமல் வானூர்திகள் இங்கு வந்து போயின. போரின் பின்னரும் பேர்த்தில் இருந்தான பயணம் நடைபெற்று வந்தது. 1946 சூன் 1 இல் இந்நிலையம் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது.[6] இதன் ஓடுபாதை 1833 மீட்டர் நீளமானது. விபத்துகளும் நிகழ்வுகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia