கோகிலா மகேந்திரன்
கோகிலா மகேந்திரன் (கோகிலாதேவி மகேந்திரராஜா பிறப்பு: 17 நவம்பர் 1950) ஈழத்து எழுத்தாளர். கலைத் திறானாய்வாளர், சமூகசிந்தனையாளர், உளவள ஆலோசகர். இவர் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், விமர்சனம், நாடகம் என பன்முகப் பரிணாமம் கொண்ட பல விடயங்களை எழுதியுள்ள பன்முகக் கலைஞர். இவரின் எழுத்துக்கள் இலங்கையின் புகழ் பெற்ற பத்திரிகைகள் பலவற்றில் இடம் பிடித்திருக்கின்றன. வாழ்க்கைச் சுருக்கம்இவர் தெல்லிப்பழை விழிசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரின் தந்தை செல்லையா சிவசுப்பிரமணியம் தெல்லிப்பழை சைவப்பிரகாசவித்தியாசாலையில் அதிபராகப் பணி புரிந்தவர். சமய எழுத்துக்காக சாகித்திய விருது பெற்றவர். தாயார் செல்லமுத்து. இவர் 1976 இல் திருமணம் செய்து கொண்டார். கணவர் கிருஸ்ணர் மகேந்திரராஜா அளவெட்டி அருணோதயக் கல்லூரியின் அதிபராகப் பணி புரிந்தவர். மகன் பிரவீணன். கோகிலா மகேந்திரன் பன்னாலை சேர் கனகசபை வித்தியாசாலையில் (விழிசிட்டி சிவஞான வித்தியாசாலை) ஆரம்பக் கல்வியைக் கற்று, பின்னர் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் உயிரியல் துறையில் உயர் கல்வியைக் கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி. இவர் 1974 இல் யாழ்ப்பாணம் பொலிகண்டி இந்து தமிழ்க்கலவன் பாடசாலையில் ஒரு விஞ்ஞான ஆசிரியராகப் பணியை ஆரம்பித்து கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயம், தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றிலும் கற்பித்து, 1994 இல் தெல்லிப்பழை சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகி, 1999 இல் வலிகாமம் கல்விவலயப் பிரதிக்கல்விப்பணிப்பாளராக உயர்வு பெற்றவர். கல்வித்துறைக்குச் சமாந்தரமாக உளவியல் பற்றியும், உளவளத்துணை பற்றியும், மனவடுவுக்கு அளிக்கப்படும் உளச்சிகிச்சை பற்றியும் கற்றவர். அரச பணியில் இருந்த காலத்திலேயே எழுத்துப் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு நாடகத் துறையையும் முறையாகக் கற்று நாடக ஆசிரியர் தரப் பரீட்சையில் தேர்வு பெற்வர். இவர் 2007 இல் அரச பணியில் இருந்து ஓய்வு பெற்றார். எழுத்துலக வாழ்வுஇவர் க.பொ.த சாதரண தரத்தில் படிக்கும் போது "மலர்களைப் போல் தங்கை" என்ற குறுநாவலை எழுதினார். அது எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை. 1972 இல் "குயில்" சஞ்சிகையில் பிரசுரமான 'அன்பிற்கு முன்னால்' என்ற சிறுகதையே அச்சில் வெளிவந்த இவரது முதலாவது படைப்பாகும். தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் விழி, விழிசைக்குயில், பசுந்தி, பதுமலாஞ்சனன் ஆகிய புனைபெயர்களிலும் எழுதியுள்ளார். இவரது கதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ஆறு சிறுகதைத் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. இவற்றுள் "பிரசவங்கள்', "வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம்' ஆகிய இரு தொகுதிகளும் தேசிய சாகித்ய விருது பெற்றவை. இவர் "சிறுவர் உளநலம்", "மகிழ்வுடன் வாழ்தல்", "சின்னக் சின்னப் பிள்ளைகள்," "உள்ளக் கமலம்", "முற்றத்தில் சிந்திய முத்துக்கள்", "சுனாமியில் சிதறிய சித்திரங்கள்" ஆகிய உளவியல் பயிற்சி சார் கைநூல்களின் நூலாசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். அத்தோடு "மனதைக்கழுவும் மகாசமர்த்தர்கள்", "தண்பதப் பெருவழி" ஆகிய உளவியல் சிறுகதைத் தொகுதிகளின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பதிப்பாசிரியராகவும் இருந்ததுடன் "சிறுவர் பாதுகாப்பு" என்ற உளவியல் கட்டுரைத் தொகுப்பினதும் வாழ்வின் முன்னேற்றத்துக்கான கற்றல் என்ற கல்வி உளவியல் பயிற்சிக் கைநூலினதும் ஆசிரியர்களில் ஒருவராகவும் இருந்துள்ளார். "திருப்பங்கள்" என்ற குறுநாவலின் ஆசிரியர்களில் ஒருவரான இவர் அதன் பதிப்பாசிரியரும் ஆவார். இவர் "மல்லாகத்தின் வரலாறும் அதன் அபிவிருத்தியும்" என்ற சரித்திர நூல், "கலையும் வாழ்வும்" நூல், "விழிமுத்து", "விழிசைச் சிவம் ஜனன நூற்றாண்டு மலர்" ஆகியவற்றின் தொகுப்பாசிரியர். "தங்கத்தலைவி", "விழிசைச் சிவம்" ஆகிய தனிமனித ஆளுமை சார் நூல்களின் ஆசிரியர். இவர் "பாவலர் துரையப்பாபிள்ளை நினைவுப் பேருரை சிறு நூல்" போன்றவற்றையும் வெளியிட்டுள்ளார். இவரது 60ஆவது, 65ஆவது, 70ஆவது அகவை நிறைவாகச் "சோலைக்குயில்", "விழிசைக் குயில்", "மாங்குயில்" ஆகிய மலர்கள் வெளிவந்துள்ளன. நாடகவுலக வாழ்வுஇவர் 23 நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். ஆறு நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்ததோடு தானும் நடித்துள்ளார். இரண்டு நாடகங்களின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். வானொலி நாடகங்களையும் எழுதிய இவர் மாணவப் பருவத்தில் ஆசிரியர்களின் நெறியாள்கையில் ஐந்து நாடகங்களில் நடித்துள்ளார். "குயில்கள்" என்ற நூல் இவர் எழுதிய சில நாடகங்களின் தொகுப்பு. "கோலங்கள் ஐந்து" என்ற நாடகத் தொகுதியின் நூலாசிரியர்களில் இவரும் ஒருவர். "கேள்விகளின் முழக்கம்' எனும் இவரது நாடகம், வட இலங்கைச் சங்கீத சபையின் "நாடக கலாவித்தகர்' என்ற பட்டத்தினை இவருக்கு ஈட்டிக்கொடுத்தது. வானொலியில்இலங்கை வானொலியில் பூவும் பொட்டும், இசையும் கதையும், நவசக்தி, கலைக்கோலம், இளவேணில் போன்ற வானொலி சார் நிகழ்வுகள் பலவற்றில் இவர் பங்கு பற்றியுள்ளார். "சைவநற்சிந்தனை” என்ற தொடரில் ஒலித்த இவரது குரல் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தது. வெளிவந்த நூல்கள்சிறுகதைகள்
நாவல்கள்
உள சமூகக் கட்டுரைத் தொகுதிகள்
உளவியல் சார் புனைவுச் சரிதை
சிறுவர் விஞ்ஞானப் புனைவுகள்
புலப்பெயர்வு சார் புனைவுகள்
பெண்ணிய உளவியல் சார் தொகுப்பு
விசேட உளவளத்துணை சிகிச்சை முறைகள்
பெற்றோரியம்
மற்றைய நூல்கள்
எழுதி நெறியாள்கை செய்த நாடகங்கள்பரிசு பெற்ற நூல்கள்
விருதுகள்சாகித்ய இலக்கிய விருது பெற்ற நூல்கள்
அரசு இலக்கிய விருது பெற்ற நூல்கள்
அரசு இலக்கிய விருதுக்காக விதந்துரைக்கப்பட்ட நூல்கள்
வடகிழக்கு மாகாண இலக்கிய விருது பெற்ற நூல்கள்
வடக்கு மாகாண இலக்கிய விருது பெற்ற நூல்கள்
விசேட விருதுகள்
கெளரவப் பட்டங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia