கோபால் கோட்சே
கோபால் வினாயக் கோட்சே (பிறப்பு-1919- இறப்பு நவம்பர் 26,2005), காந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்ட நாதுராம் கோட்சேவின் தம்பி ஆவார். ஜனவரி 30, 1948, ல் நிகழ்ந்த மாகாத்மா காந்தியின் கொலையில் 18 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று, 2005 ம் ஆண்டு வரை வாழ்ந்து மறைந்தவர் இவர் மட்டுமே. இவர் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே மாவட்டத்தில் உள்ள பாராமதி நகரத்தில் பிறந்தவர். இவருக்கு சிந்து கோட்சே எனும் மனைவியும் மற்றும் ஒரு மகனும், இரண்டு மகள்களும் இருந்தனர். இவருடைய அண்ணன் நாதுராம் கோட்சே காந்தியைச் சுட்டுக் கொன்றதற்காகவும் இவருடன் கொலைச்சதியில் பங்குகொண்டமைக்காக நாராயண் ஆப்தேவுடன் சேர்த்து நவம்பர் 15, 1949 ல் அம்பாலா சிறையில் தூக்கிலிடப்பட்டனர். இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவரான இவரும் பெப்ரவரி 5, 1948 ல் கைது செய்யப்பட்டு 18 வருடம் ஆயுள் தண்டணைப் பெற்றார்.[1] இவர்கள் மூவரும் காந்தி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதாக எண்ணியதால் இக்கொலைச் செயல் புரிந்தனர். கோபால் கோட்சே 1998 ல் ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் காந்தி கொல்லப்பட்டதற்காக நான் என்றும் வருந்தியதில்லை அவர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதை இன்றும் வெறுக்கின்றேன் என்று பேட்டியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.[2] இவர் தமது 86-வது அகவையில் புனே நகரத்தில் 27 நவம்பர் 2005 அன்று மறைந்தார். இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia