கோபிநாதப்பெருமாள் கோயில்![]() ![]() ![]() கோபிநாதப்பெருமாள் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் பட்டீஸ்வரம் அருகேயுள்ள பழையாறை நகரின் வடமேற்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு பெருமாள் கோயில் ஆகும்.[1] இக்கோயிலை கோனப்பெருமாள் கோயில் என்றும் அழைக்கின்றனர்.[2] பெருமாள்இங்கு மூலவராக பெருமாள் காட்சியளிக்கிறார். விஜயநகரப் பேரரசின் கற்றளி கோயில்விஜயநகரப் பேரரசின் திருமலை தேவமகாராயரால் கி.பி.15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக அவரது கல்வெட்டுக்களில் இக்கோயில் பற்றிய பல குறிப்புகள் காணப்பெறுகின்றன.[1] கி.பி.1450இல் மல்லிகார்ஜுன தேவராயர் சாசனம் இவ்வூரை திருச்த்திமுற்றமான முடிகொண்ட சோழபுரத்தில் இருந்ததாகச் சொல்கிறது. பழையாறை மாநகரின் வடமேற்கே செம்மாந்து இருந்த இக்கோயிலின் பெரும்பகுதி காலத்தின் கோலத்தால் மறைந்துவிட்டாலும் இன்றும் பண்டைய எச்சங்களைக் காணலாம்.[3] தற்போதைய நிலைவாயிற்கோபுரம் இடிபாடுற்ற நிலையிலும், கோயில் வளாகம் புல்பூண்டு முளைத்தும் தற்போது உரிய பராமரிப்பின்றி உள்ளது.சன்னதிக்குள் செல்லமுடியாதபடி எங்கு பார்ததாலும் புற்கள் காணப்படுகின்றன. கோயில் வளாகம் முழுவதும் அசுத்தமாகக் காணப்படுகிறது.கோயிலின் திருச்சுற்றில் வெளியே இடிபாடுற்ற நிலையில் கோபுரம் போன்ற அமைப்பு காணப்படுகிறது. இரு புத்தர் சிலைகள்பட்டீஸ்வரம்-திருவலஞ்சுழி சாலையில் பட்டீஸ்வரத்திலிருந்து 2 கி.மீ. தொலைவிலுள்ள கோபிநாதப் பெருமாள் கோயில் அருகே ஒரு தோப்பில் தலையில்லாத புத்தர் சிலை பிப்ரவரி 2002இல் கண்டுபிடிக்கப்பட்டது.[4] [5] [6] சூன் 2002இல் மற்றொரு புத்தர் சிலை அவ்விடத்தருகே கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்டு 2011இல் அந்த இரு சிலைகளையும் காணவில்லை. மேற்கோள்
|
Portal di Ensiklopedia Dunia