கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில்
கோழிக்குத்தி வானமுட்டிப் பெருமாள் கோயில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அமைந்துள்ள வைணவக்கோயிலாகும். அமைவிடம்இக்கோயில் மயிலாடுதுறை-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள மூவலூரிலிருந்து 2 கி.மீ. புறவழிச்சாலையில் 5 கி.மீ. தொலைவில் கோழிக்குத்தி அமைந்துள்ளது. சோழன்பேட்டை கிராமத்தில் அமைந்த கோடிஹித்தி பாப விமோசனபுரமே கோழிக்குத்தி என்று தற்போது அழைக்கப்படுகிறது.[1] இறைவன், இறைவி14 அடி உயரத்தில் அத்தி மரத்தில் வடிக்கப்பட்டு மூலிகை நிறம் தீட்டப்பட்டு கிழக்கு நோக்கிய நிலையில் இறைவன் உள்ளார். பக்தப்ரியன் என்ற பெயரில் இப்பெருமாள் தயாலட்சுமி, பூமிதேவியோடு உள்ளார்.[1] கோயிலின் தீர்த்தம் பிப்பல மகரிஷி தீர்த்தம் ஆகும்.[2] பிற சன்னதிகள்இக்கோயிலில் வரதராஜப்பெருமாள், யோக நரசிம்மர், சக்கரத்தாழ்வார், நர்த்தன கிருஷ்ணர், கருடாழ்வார், சப்தசொரூப ஆஞ்சநேயர், விஷ்வக்சேனர், ராமானுஜர், பிப்பல மகரிஷி ஆகியோருக்கான சன்னதிகள் காணப்படுகின்றன.[1] இங்குள்ள ஆஞ்சநேயரை சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்றழைக்கின்றனர். இச்சிலையில் தட்டினால் ஏழு இடங்களில் ஓசை வருகிறது.[2] மேற்கோள்கள்இவற்றையும் காண்கவெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia