கோவிட்-19 மருந்து மேம்பாடு என்பது 2019-20 கொரோனா வைரஸ் நோயின் (COVID-19) தீவிரத்தைத் தணிக்கும் ஒரு தடுப்பு மருந்து அல்லது சிகிச்சைக்குப் பரிந்துரைக்கும் மருந்தை உருவாக்குவதற்கான ஆராய்ச்சி செயல்முறையாகும். சர்வதேச அளவில் மார்ச் 2020 நிலவரப்படி, சுமார் 100 மருந்து நிறுவனங்கள், உயிரி தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சி குழுக்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் தடுப்பூசி அல்லது மருந்து வளர்ச்சிக்கான ஆராய்ச்சிக்கான கட்டங்களில் ஈடுபட்டன. [1][2][3][4][5]உலக சுகாதார அமைப்பு (WHO), [6] ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA), [7] அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), [8] மற்றும் சீன அரசாங்கமும் மருந்து உற்பத்தியாளர்களும் [9] ஆராய்ச்சி மாணவர்கள் தடுப்பூசிகள், வைரஸ் தடுப்பு மருந்துகள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகள் ஆகியவற்றை விரைவாக உருவாக்க தொழில்முறை ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். [10][11]
மார்ச் 2020 க்குள், தொற்றுநோய் எதிர் மருந்து தயாரிப்பு கண்டுபிடிப்பு மற்றும் புதுமைககளுக்கான கூட்டணி (CEPI) ஒரு சர்வதேச கோவிட்-19 தடுப்பூசி மேம்பாட்டு நிதியைத் துவக்கியது. தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 2 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டுவதற்கான குறிக்கோளுடன், [12] பல்வேறு நாடுகளிலும் இந்த மருத்துவ ஆராய்ச்சியின் வளர்ச்சிக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளுக்கு உறுதியும் அளித்தது. மார்ச் மாத தொடக்கத்தில், மற்றொரு கொரோனா வைரஸ் வெடிப்பு ஏற்பட்டால் செயல்படுத்துவதற்காக கனடா பல்கலைக்கழகங்களில் ஏராளமான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பாளர்களின் முன்மொழிவுகள் உட்பட, [13] புதிய "தடுப்பு மருந்து வங்கியை" நிறுவுவதற்கான திட்டங்களுடன், கோவிட்19 க்கு எதிரான மருத்துவ நடவடிக்கைகள் குறித்த 96 ஆராய்ச்சி திட்டங்களுக்கு கனடா அரசாங்கம் கனடா டாலரில் 275 மில்லியன் நிதியுதவியை அறிவித்தது.