சக்ரி வம்சம்சக்ரி வம்சம் ( Chakri dynasty) ⓘ என்பது தாய்லாந்து இராச்சியத்தின் தற்போதைய ஆளும் அரச மாளிகையாகும். குடும்பத்தின் தலைவர் மன்னர், எனவே அவரே நாட்டின் தலைவராவார் . சியாமின் தலைநகரம் பாங்காக்கிற்கு மாற்றப்பட்டபோது, தக்ஸின் தோன்பூரியின் ஆட்சி முடிவடைந்ததைத் தொடர்ந்து 1782 ஆம் ஆண்டில் இரத்தனகோசின் இராச்சியமும், பாங்காக் நகரமும் நிறுவப்பட்டதிலிருந்து வம்சம் தாய்லாந்தை ஆண்டது. சினோ - மோன் வம்சாவளியைச் சேர்ந்த அயூத்தயா இராணுவத் தலைவரான முதலாம் ராமா என்பவரால் இந்த அரச வீடு நிறுவப்பட்டது. வம்சம் நிறுவப்படுவதற்கு முன்னர், முதலாம் ராமா பல ஆண்டுகளாக சக்ரி என்ற தலைப்பை பட்டமாக வைத்திருந்தார். வம்சத்தை நிறுவும்போது, அவர் வம்சத்தின் பெயராக "சக்ரி " யைத் தேர்ந்தெடுத்தார். வம்சத்தின் சின்னமாக விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோரின் ஆயுதங்களான சக்ராயுதமும், திரிசுலமும் என அமைக்கப்பட்டது. இவற்றில் தாய் இறையாண்மை ஒரு அவதாரமாகக் காணப்படுகிறது. வீட்டின் தற்போதைய தலைவர் வச்சிரலோங்கோன் 1 திசம்பர் 2016 அன்று ராஜாவாக அறிவிக்கப்பட்டார். ஆனால் பூமிபால் அதுல்யாதெச் மரணத்திற்குப் பிறகு 13 அக்டோபர் 2016 முதலே செயல்பட்டார். வீட்டின் தற்போதைய வம்ச இருக்கை பெரிய அரண்மனையாகும். மே 4, 2019 சனிக்கிழமையன்று, பாங்காக்கில் வச்சிரலோங்கோனின் முடிசூட்டு விழா ஒரு பெரிய பாரம்பரிய விழாவாக நடந்தது. [1] ![]() மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia