சங்க நிதி (இறைவி)
ஒன்பது வகையான நிதிகளுள் (நவ நிதிகள்) சங்க நிதிக்குரிய தெய்வமாக சங்க நிதி உள்ளார். இவரை சங்க லட்சுமி எனவும் அழைக்கின்றனர். சங்க நிதி தன்னுடைய கைகளில் செல்வச் செழிப்பினைக் குறிக்கும் அடையாளமான வலம்புரிச் சங்கினை வைத்துள்ளார். இந்து சமய கோயில்களின் வாயில்கள் சிலவற்றில் ஒருபுறம் சங்கநிதி புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் பதுமநிதி புடைப்புச் சிற்பம் உள்ளது.
இவரை குபேரனின் மனைவியாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.[சான்று தேவை] ![]() சங்க நிதி, பதும நிதி என இரு தெய்வ மகளிரிடமும் குபேரன் தன் செல்வங்களைக் கொடுத்து வைத்துள்ளதாக நம்பப்படுகிறது. சங்கம், பதுமம், மகாபதுமம், மகரம், கச்சபம், முகுந்தம், குந்தம், நீலம், வரம் ஆகியன ஒன்பது நிதிகளாகும். இவற்றை குபேர சம்பத்துகள் என அழைக்கின்றனர். இந்த ஒன்பது நிதிகளில் சங்கநிதி மற்றும் பதும நிதி இரண்டிற்கு மட்டுமே உருவங்கள் உள்ளன. சங்கநிதி, பதுமநிதி என இருநிதிகளும் எப்போதுமே ஒருசேர இருக்கின்றனர்.
மந்திரம்ஓம் ஸ்ரீம் க்லீம் சங்கநிதயே நம: சூர்ய வாசாய மாணிக்க ரத்னப்ரியாய கமல புஷ்ப வாசாய சங்கரூபே நிதிதேவாயநம: ஆவாகயாமி. நவநிதிசேவை
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia