சந்திரவதனா செல்வகுமாரன்
சந்திரவதனா செல்வகுமாரன் (மேலைப்புலோலியூர், ஆத்தியடி, பருத்தித்துறை, இலங்கை) ஜேர்மனிய, ஈழத்து எழுத்தாளர். இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை பல்வேறு தளங்களிலும் எழுதி வருவதுடன், பல தமிழ் இணைய இதழ்களின் ஆசிரியராகவும் இருக்கிறார். வாழ்க்கைச் சுருக்கம்சந்திரவதனா இலங்கையின் வடபுலத்தில் அமைந்துள்ள ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மு. ச. தியாகராஜா, சிவகாமசுந்தரி இணையரின் குழந்தைகள் எண்மரில் இரண்டாமவர். வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்றவர். கணிதத் துறையில் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவர். 1986இலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகிறார். எழுத்துலக வாழ்வு1975இலிருந்து எழுதிவரும் இவரது எழுத்தார்வம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மூலமாகத் தொடங்கியது. இவரது பன்முகப்பட்ட படைப்புகள் வானொலிகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் பலவற்றில் வெளிவந்துள்ளன. இவர் தனது மனஓசை வலைப்பதிவு வாயிலாக சமூக, அரசியல், இலக்கிய மற்றும் சுய உணர்வுகளை வெளிப்படுத்துகிறார். சிறுகதை, கவிதை, கட்டுரையென இவரது பன்முக ஆற்றல் வெளிப்படுகிறது. இவரின் படைப்புக்கள் எரிமலை, களத்தில், ஈழமுரசு, ஈழநாடு, குமுதம், இளங்காற்று, புலம், சக்தி (பெண்கள் இதழ்), பெண்கள் சந்திப்பு மலர் (பெண்கள் இதழ்), உயிர்ப்பு, பூவரசு (சஞ்சிகை), வெற்றிமணி, முழக்கம், தங்கதீபம், வடலி, குருத்து, செம்பருத்தி, யாழ் (இணைய இதழ்), சூரியன் (இணைய இதழ்), பதிவுகள் (இணைய இதழ்)[1], திண்ணை (இணைய இதழ்)[2][3], அக்கினி (இணைய இதழ்), யுகமாயினி உட்படப் பல பத்திரிகைகள், சஞ்சிகைகள் மற்றும் இணைய இதழ்கள் போன்றவற்றில் வெளிவந்திருக்கின்றன. இவரது ‘வழக்கம் போல் அடுப்படிக்குள்’ என்ற கவிதை, சமூகக் கட்டமைப்பைத் தோலுரிக்கும் பெண்மொழிக்கவிதைகள் என்ற தலைப்பில், தமிழ்த்துறை அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.[4] இணைய இதழ்கள்2002 இல் இவர் ஆரம்பித்த மனஓசை இணையஇதழும், 2003 இல் ஆரம்பித்த மனஓசை வலைப்பூவும்(வலைப்பதிவு), பெண்கள் வலைப்பதிவும் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. வெளிவந்த நூல்கள்
பதிப்பித்த நூல்கள்
பரிசுகளும் விருதுகளும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia