சனத்சுஜாதீயம்![]() சனத்சுஜாதீயம் (Sānatsujātiya) வேதவியாசர் எழுதிய மகாபாரதம் இதிகாசத்தின் குருச்சேத்திரப் போருக்கு முன்னர் வரும் உத்யோக பருவத்தில், அத்தியாயம் 41 முதல் 46 வரை, விதுரனின் வேண்டுதலுக்கு இணங்க சனத்குமாரர் என்ற முனிவர் திருதராட்டிரனுக்கு ஆத்ம அல்லது பிரம்ம வித்தையை உபதேசிப்பதையே சனத்சுஜாதீயம் என்பர்.[1] சனத்ஜாதீயத்திற்கு ஆதி சங்கரர் விளக்க உரை எழுதியுள்ளார்.[2] காசிநாத் திரியம்பக் தெலாங் என்ற சமசுகிருத அறிஞர் சனத்சுஜாதீயத்தை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளார்.[3][4] சனத்சுஜாதீயத்தின் மையக் கருத்து, குருச்சேத்திரப் போரினால் தன் மகன்களான கௌரவர்களுக்கு இறப்பு ஏற்படும் என அஞ்சிய திருதராட்டினுக்கு, சனத்குமாரர் உடல் மித்தியா (நிகழ்காலத்தில் மட்டும் காட்சியளிப்பது) என்றும், ஆன்மா மட்டுமே நித்தியம் (முக்காலத்திலும் இருப்பது) என்று உபதேசிப்பதன் மூலம் மரணம் உடலுக்கு மட்டுமே, ஆன்மாவுக்கு அல்ல என தெளிவு படுத்துகிறார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia