சபிதா இந்திர ரெட்டி
பட்லோல்லா சபிதா இந்திர ரெட்டி (Sabitha Indra Reddy) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய தெலங்காணாவில் கல்வி அமைச்சராக உள்ளார். இவர் மகேஸ்வரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 2019ஆம் ஆண்டு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியில் சேர்ந்தார். மறைந்த ஆந்திர முதல்வர் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி பதவி வகித்த துறையானது இவருக்கு ஒதுக்கப்பட்டது. இவர் தெலங்காண அரசின் முதல் பெண் அமைச்சராவார்.[1] தனிப்பட்ட வாழ்க்கைசபிதா மே 5, 1963 அன்று தந்தூரில் ஜி. மஹிபால் ரெட்டிக்கு மகளாகப் பிறந்தார். இளங்கலை அறிவியல் வரை தனது கல்வியை முடித்த இவர், செவெல்லா சட்டமன்றத் தொகுதியிலிருந்து இரண்டு முறை ஆந்திராவின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். என். டி. ராமராவ் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த பி. இந்திர ரெட்டியை (1954-2000) இவர் திருமணம் செய்து கொண்டார். இந்தம்பதியருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்திர ரெட்டி தெலுங்கானாவில் மிகவும் பிரபலமான தலைவர். சாலை விபத்தில் தனது கணவர் இறந்த பின் சபிதா அரசியலில் இறங்க வேண்டியிருந்தது. அரசியல் வாழ்க்கைசபிதா, முந்தைய அரசாங்கத்தில் சுரங்க மற்றும் புவியியல் அமைச்சர் பதவியை வகித்தார். இவர் தெலங்காணா மாநிலத்தின் முதல் பெண் உள்துறை அமைச்சர் ஆவார்.[2] இவர் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் செவெல்லா தொகுதியில் இரண்டு முறையும், மகேஸ்வரம் தொகுதியில் இரண்டு முறையும் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia