சப்லா (இந்தியா)இளம் பருவப் பெண்களுக்கான ராசீவ் காந்தி திட்டம் (Rajiv Gandhi Scheme for Empowerment of Adolescent Girls) சப்லா என்பது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் தேதியன்று தொடங்கப்பட்ட இந்திய அரசின் மத்திய நிதியுதவி திட்டமாகும்.[1] குறிக்கோள்திட்டத்தின் நோக்கங்கள்:
உள்ளடக்கம்கீழ்க்கண்டவாறு ஒருங்கிணைக்கப்பட்ட சேவைகள் இளம்பெண்களுக்கு வழங்கப்பட உள்ளது:
தகுதி வரம்புஇந்தத் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 200 மாவட்டங்களில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டங்களின் கீழ் 11 வ்யது முதல் 18 வயதுடைய இளம்பெண்களை (பள்ளிப் பெண்கள் மட்டுமே உள்ளடக்கியது) உள்ளடக்கும். இலக்கு குழு 11 வ்யது முதல் 15 வயது வரை மற்றும் 15வ்யது முதல் 18 வயது வரை என பிரிக்கப்படும்.[2] கிசோரி நலத்திட்டங்கள்கிசோரி கார்டுஇந்தத் திட்டத்தின் படி ஒவ்வொரு பருவப் பெண்ணுக்கும் ஒரு ‘கிசோரி கார்டு’ வழங்கப்படும்.அந்த கார்டில் அப்பெண்ணின் எடை, உயரம், உடல் நிறை குறியீட்டெண், இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் கூடுதல், பரிந்துரைகள் மற்றும் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட சேவைகள் பற்றிய விவரங்கள் எழுதப்படும். மேலும் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமான மைல்கற்களான பள்ளியில் சேருதல், பள்ளியை விட்டு வெளியேறுதல், திருமணம் போன்ற தகவல்களும் இருக்கும். கிசோரி திவாசு‘கிசோரி திவாசு’ என மூன்று மாதத்திற்கு ஒருமுறை சிறப்பு ஆரோக்கிய தினமாக கொண்டாடப்படும். அத்தினத்தில் பொது சுகாதார சோதனை அனைத்து மகளிர்களுக்கும் செய்யப்படும். கிசோரி சமூகு குழு'கிசோரி சமூகு' குழு என 15 வயது முதல் 25 வயது வரை உள்ள பெண்களுக்கு அங்கன்வாடி மைய அளவில் உருவாக்கப்படும். அவர்களில் ஒரு பெண் தலைவியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இளம்பெண்களுக்கு பயிற்சி பெட்டி வழங்கப்படும். திட்டத்திற்கான செலவினம் சென்ட் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும். [3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia