சமய மெய்யியல்சமய மெய்யியல் அல்லது மத மெய்யியல் என்பது மெய்யியலின் ஒரு பிரிவு. இது சமயம், கடவுளின் இருப்பு, கடவுளின் இயற்கைப் பண்பு, சமய அனுபவத்தின் சோதனை, சமய நூல்கள், சமயச் சொல்லகராதி, அறிவியலுக்கும் சமயத்திற்குமான விடயங்கள் உள்ளிட்டவற்றை கேள்விகளுடன் தொடர்புபடுத்துவதாகும்.[1] இது பண்டைய ஒழுக்க முறையுடன் தொடர்புடையது மட்டுமின்றி மெய்யியலுடனும் தொடர்புடையது ஆகும். இதைப் பற்றிய ஆரம்பகால கையெழுத்துப் பிரதிகளில் மெய்யியலுடனான தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஏனைய மெய்யியல் கிளைகளுடனும், பொதுச் சிந்தனை, வரலாறு, ஏரணம், பௌதீக அதீதவியல் உட்பட்டவற்றுடனும் தொடர்புடையது.[2] சமய மெய்யியல் பிரபலமான புத்தகங்களின் மூலமும் விவாதங்களின் மூலமும் கல்வித்துறைக்கு வெளியே அடிக்கடி பேசப்படுகிறது. குறிப்பாக, இது கடவுளின் இருப்பைப் பற்றியும் தீவினைச் சிக்கலைப் பற்றியதாகவும் அமைகின்றது. உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia