சமிந்த எரங்கா
சமிந்த எரங்கா (Shaminda Eranga, பிறப்பு: 23 சூன் 1986) இலங்கைத் துடுப்பாட்டப் பந்து வீச்சாளர் ஆவார். சமிந்த எரங்கா தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியை இலங்கை அணிக்காக 2011 ஆகத்து 16 இல் அம்பாந்தோட்டை, துடுப்பாட்ட அரங்கில், ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி, இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.[1] முதலாவது தேர்வுப் போட்டியை 201 செப்டம்பர் 16 இல் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடினார். தனது முதலாவது பந்திலேயே விக்கெட் ஒன்றைக் கைப்பற்றினார். இவ்வாறு உலகிலேயே முதலாவது பந்தில் விக்கெட் கைப்பற்றியவர்களில் இவர் 15வது வீரர் ஆவார். மொத்தம் ஐந்து விக்கெட்டுகளை இவர் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் பெற்றார்.[2] துடுப்ப்ட்ட விளையாட்டுகளில் இவர் தொடர்ச்சியாகக் காயமடைந்து வந்ததால், இவரது இரண்டாவது தேர்வுப் போட்டி 2012 ஆகத்திலேயே இடம்பெற்றது. அப்போது அவர் தனது முதலாவது பன்னாட்டு இருபது20 போட்டியிலும் விளையாடினார். இந்தியாவுக்கு எதிரான இ20 போட்டியில் தனது முதலாவது ஓவரிலேயே கம்பீரின் விக்கெட்டைக் கைப்பற்றினார். இதன் மூலம், தான் விளையாடிய அனைத்து முதலாவது துடுப்பாட்ட விளையாட்டுகளிலும் (தேர்வு, ஒருநாள், இருபது20) முதல் ஓவரிலேயே விக்கெட்டைக் கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia