சரத் குமார் (தடகள வீரர்)
சரத் குமார் (Sharad Kumar) (பிறப்பு 1 மார்ச்சு 1992) ஒரு இந்திய உயரந்தாண்டுதல் வீரரும் முன்னாள் உலக சாதனையாளரும் ஆவார். இவர் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் பிறந்தவர். இவர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாக முதன் முதலாக பன்னாட்டு போட்டிகளில் அறிமுகமானார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் உயரந்தாண்டுதலில் (T42), 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து உலகின் தங்கப்பதக்கத்தையும் உலக அளவிலான முதல் இடத்தையும் பெற்றார். குமார் 2016 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தில் தனது நிலையை உறுதிப்படுத்திக் கொண்டார். 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகளப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பாரிசில் நடந்த 2024 கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தகுதி பெற்றார்.[5] அங்கு உயரம் தாண்டுதலில் டி63 பிரிவில் விளையாடி 1.88 மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆரம்ப கால வாழ்க்கைசரத் குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் 1992 ஆம் ஆண்டு மார்ச்சு 1 ஆம் தேதி பிறந்தார். இரண்டு வயதில் அவர் உள்ளூரில் நடத்தப்பட்ட போலியோ ஒழிப்பு இயக்கத்தில் வழங்கப்பட்ட போலியான போலியோ மருந்தை எடுத்துக் கொண்டபின், இடது காலின் முடக்குதலால் பாதிக்கப்பட்டார்.[6] சரத் புனித பவுல் பள்ளியில் (டார்ஜிலிங்) படித்தார். அங்கு அவர் ஏழாம் வகுப்பில் படிக்கும் போது உயரந்தாண்டுதலில் ஈடுபடத் தொடங்கினார். குறைபாடு இல்லாத இயல்பான விளையாட்டு வீரர்களுக்கு எதிராக போட்டியிட்டு பள்ளி மற்றும் மாவட்ட அளவிலான சாதனைகளை முறியடித்தார்.[7] தனது உயர் கல்விக்காக அவர் புது தில்லிக்குச் சென்றார். அங்கு அவர் மாடர்ன் பள்ளியில் தனது மேல்நிலைப் படிப்பைத் தொடர்தார். கிரோரி மால் கல்லூரியில் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றார்.[8] தொழில் முறை வாழ்க்கை![]() சரத் தனது முதல் பன்னாட்டு அளவிலான அறிமுக நகர்வை 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற குவாங்சௌ இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் மூலமாகத் தொடங்கினார். 2012 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் 1.64மீ, 2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களில் கலந்து கொள்ள தகுதி பெற்றார். தனது 19 ஆவது வயதில், 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மலேசிய இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில், 1.75மீ உயரம் தாண்டி அவர் உலக அளவிலான சாதனையைப் படைத்தார். இருப்பினும் இலண்டன் கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் அவர் தடை செய்யப்பட்ட மருந்தைப் பயன்படுத்தியது தொடர்பான சோதனையில் உடன்பாடான முடிவு வரப்பெற்றதால் பதக்க வாய்ப்பினை இழந்தார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 1.80மீட்டர் உயரத்தைத் தாண்டி, 12 ஆண்டு கால இணை ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தையும், உலகளவிலான முதல் இடத்தையும் பெற்றார். 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ரியோ கோடைக்கால இணை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று 1.77 மீட்டர் உயரத்தைத் தாண்டி, ஆறாம் இடத்தைப் பெற்றார். அவர் மார்ச்சு 2015 இலிருந்து தேசிய இணைத் தடகள பயிற்சியாளர் சத்யநாராயணனிடம் பயிற்சி பெறத் தொடங்கினார்.[9] 2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலக இணை தடகள விளையாட்டுப் போட்டிகளில் 1.84மீட்டர் உயரத்தைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் பெற்றார். மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia