சாவித்திரி கனோல்கர்
சாவித்திரிபாய் கனோல்கர் (Savitri Bai Khanolkar) (இயற்பெயர் Eve Yvonne Maday de Maros, 20 சூலை 1913 – 26 நவம்பர் 1990)[1] இந்திய இராணுவத்தினருக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்கரம் மற்றும் பிற உயர்ந்த விருதுகளின் வடிவமைப்பாளர் ஆவார்.[2] சாவித்திரி கனோல்கர் ஒரு ஓவியரும் ஆவார். கேப்டன் விக்ரம் இராம்ஜி கனோல்கர் சுவிட்சர்லாந்தில் இராணுவப் பயிற்சி மேற்கொண்டிருந்த போது, 1932-இல் சாவித்திரிபாயை மணந்து கொண்டார்.[3] 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், மேஜர் ஜெனரல் ஹிரா லால் அடல் வேண்டுகோளின் பேரில், போர்க் காலத்தில் மற்றும் அமைதிக் காலத்தில் இராணுவத்தினரின் வீர தீர செயல்களுக்காக வழங்கும் பரம் வீர் சக்கரம், அசோகச் சக்கரம் போன்ற விருதுகளை வடிவமைக்க கேட்டுக் கொள்ளப்பட்டார். [1][4] தற்செயலாக இவர் வடிவமைத்த முதல் பரம் வீர் சக்கரம் விருது, இவரது மூத்த மகள் குமுதினியின் கணவரின் அண்ணனான சோம்நாத் சர்மாவிற்கு 1947-இல் வழங்கப்பட்டது. வெளி இணைப்புகள்
அடிக்குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia