சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில்
சிங்கப்பூர் துரிதக் கடவு ரயில் சேவை உலகின் சிறந்த துரிதக் கடவு ரயில் சேவையாக பல முறை விருதுகள் வாங்கிய ரயில் நிறுவனமாகும். இது தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாம் பழமையான துரிதக் கடவு ரயில் சேவையாகும். தினமும் 3.2 மில்லியன் மக்களை.[2] நாட்டின் பல இடங்களுக்கு எடுத்து செல்லும் இந்த சேவையானது 1987 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. மொத்தம் 147[1] தொடருந்து நிலையங்களையும், 129.7 கிலோமீட்டர் நீள தண்டவாளங்களையும் கொண்டது இந்த ரயில் சேவை. சிங்கப்பூர் அரசாங்கத்தின் கீழ் இயங்கும் நில போக்குவரத்து ஆணையம் இந்த வழித்தடங்களை இடுகிறது. காலை 5.30 மணி முதல், நள்ளிரவு 1 மணி வரை இந்த சேவை தடையின்றி நடந்து வருகிறது. விழாக்காலங்களில் இந்த சேவை அதிக நேரத்திற்கு நீட்டிக்கப்படுகிறது[3]. வரலாறு1967 ஆம் ஆண்டில்[4][5] இருந்து சிங்கப்பூரின் வளர்ச்சி பற்றி ஆய்வுகள் மேற்கொண்ட நிருவனங்களின் அறிவுரையின் படி சிங்கப்பூர் பேருந்துகளை மட்டுமே சார்ந்து இருப்பது உகந்தது அல்ல என்றும், வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் சிறிய நாடாக இருக்கும் காரணம் போன்றவற்றை மனதில் கொண்டு சிங்கப்பூர் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின் முடிவாக, அந்நாட்டின் வரலாற்றிலேயே அதிகபட்ச நிதி ஓதிக்கீட்டுத் தொகையாக 5 பில்லியன் வெள்ளியில் இந்த திட்டம் தொடங்கியது.[6][7]. 1983 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகளை தொடங்கி, நவம்பர் 7, 1987 அன்று, யோ சூ காங் மற்றும் தோ பா யோ இடையே ரயில் சேவை தொடங்கியது. வடக்கு தெற்கு வழித்தடங்களில் 5 நிலையங்களுடன் இந்த சேவை நடைபெற்றது. பின்னர் 1988 ஆம் ஆண்டு மேலும் 15 நிலையங்கள் இதனுடன் இணைக்கப்பட்டது. எதிர்பார்த்ததை விட இரண்டு வருடங்களுக்கு முன்னதாக, அதாவது 1990ஆம் ஆண்டு 21 நிலையங்களுடன் இந்த வழித்தடம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டது. தற்போதைய நிலைபின் வந்த ஆண்டுகளில் படிப்படியாக மற்ற வழித்தடங்களும் கட்டப்பட்டு தற்பொழுது மொத்தமாக 72 ரயில் நிலையங்களுடன் பெரும் நிறுவனமாக சேவையை செய்து வருகிறது .
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia