சித்திரதுர்க்கா கோட்டை
![]() சித்திரதுர்க்கா கோட்டை (Chitradurga Fort), இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், சித்ரதுர்கா மாவட்டத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த மலைக்கோட்டையாகும்.[1][2][3]"அழகிய கோட்டை" என்று பொருள்படும் சித்ரதுர்காகோட்டை, 15 ஆம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசின் சித்ரதுர்காவின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. வரலாறுகோட்டையின் கல்வெட்டுகளின் மூலம் இது கி.மு 3 வது மில்லினியம் வரையில் உள்ள் வரலாற்று நிகழ்வுகள் குறிக்கப்பட்டுள்ள்து. இது இக்கோட்டையின் பழமையை குறிக்கிறது[4]. சித்ரதுர்கா கோட்டை கிபி 15ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் சித்ரதுர்கா நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. ஹொய்சாலர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த பிரதேசம் விஜயநகரப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது. விஜயநகர பேரரசின் நாயக்க மன்னர்கள் அவர்களின் வம்சாவளி ஆட்சி வரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆட்சி செய்து வந்தனர். பிறகு சித்ரதுர்காவின் நாயக்க மன்னர்கள் இப்பகுதியின் சுதந்திரமான கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டனர். அவர்கள் 200 ஆண்டுகளாக தங்களின் கடைசி ஆட்சியாளர் மடகாரி நாயக்கர், மைசூரை சேர்ந்த ஹைதர் அலியால் தோற்கடிக்கப்படும் வரை ஆண்டனர். அது வரையிலும் அவர்களின் கோட்டை மற்றும் அவர்களின் மாகாணத்தின் இதயமாய் திகழ்ந்தது[5]. கட்டமைப்புகள்சித்ரதுர்கா கோட்டை கீழ் கண்ட பல கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
சேமிப்பக கிடங்கு, வீடுகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் முதன்மையாக நீண்டகால முற்றுகைகளை எதிர்கொள்ள தேவையான உணவு, நீர் மற்றும் இராணுவப் பொருட்களை உறுதிப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த வசதிகள் அனைத்தையும் இன்னும் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் வடிவமைப்பின் முதன்மையாக தற்காப்பு இருந்தது.கோட்டையின் சுவர்களில் சிறிய வாயில்களில் வில்லாளர்கள் எதிரிகளின் மீது அம்புகளை எறிவதற்காக பயன்படுத்தப்பட்டன. இந்த சுவர்களுக்கு நான்கு வாயில்கள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நான்கு வாயில்கள் இரங்க வாயில் என்று அழைக்கப்படுகின்றன, இரண்டாவது சித்தயான வாயில் என்றும், மூன்றாவது உட்சாங்கி வாயில் என்றும், நான்காவது லால்கோட்டை வாயில் என்றும் அழைக்கப்படுகிறது.நிலப்பகுதி மற்றும் புவியியல் பரப்பளவைப் பொறுத்து, கோட்டையின் சுவர்கள் 5-13 மீ (16.4-42.7 அடி) உயரத்தில் கட்டப்பட்டுள்ளன. ஆரம்பத்தில், அது சேற்றால் கட்டப்பட்டது ஆனால் பின்னர் 15ம் நூற்றாண்டில் கருங்கல் அடுக்குகளை வைத்து எழுப்பப்பட்டது[6].இக்கோட்டையில் பதினெட்டு கோவில்களும் கட்டப்பட்டுள்ளன. புகழ்பெற்ற கோயில்களில் சில: ஹேபேஸ்வரர் (பழங்கால புராணத்துடன் இணைக்கப்பட்டுள்ளது), சம்பி சித்தரேஸ்வரர், ஏகநாதம்மா, பால குனேஷ்வரா, கோபாலா கிருஷ்ணா, ஹனுமான், சுபராயா மற்றும் நந்தி ஆகியோரைக் கொண்டது. மேற்கோள்கள்
குறிப்புகள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia