சின்ன சின்னக் கண்ணிலே
சின்ன சின்னக் கண்ணிலே (Chinna Chinna Kannile) 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரகாஷ் ராஜ், குஷ்பு மற்றும் நாசர் நடித்துள்ள இப்படத்தை அமீர்ஜான் இயக்கினார். இப்படத்திற்கு சம்பத் செல்வன் இசை அமைத்துள்ளார்.[2][3][4][5] கதைச்சுருக்கம்ரதி குஷ்பு ஒரு இசைக் காணொளி இயக்குநர், தன் கணவர் ரவி நாசர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்துவருகிறாள். ரதிக்கு தன் கணவன் ஒரு கொள்ளைக்காரன் எனத் தெரியாது. ரவி தன் கூட்டாளி சபேசனுடன் பிரகாஷ் ராஜ் சேர்ந்து குற்றங்களைச் செய்கிறான். காவல்துறை அதிகாரியான தேவ் (தலைவாசல் விஜய்க்கு) இவர்களைப் பிடிக்கும்படி உத்தரவு வருகிறது. வைரக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்கில் ரவி பிடிபடுகிறான். ஆனால் சபேசன் தப்பித்து விடுகிறான். ரவி காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, வைரங்களைத் தன் வீட்டில் பதுக்கி வைக்கிறான். விசாரணையின் போது ரவி, காவல்துறை அதிகாரியான தேவால் சுடப்படுகிறான். பலமான காயங்களினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான். மருத்துவர்களால் அவன் உயிர் பிழைக்கிறான். பிறகு, சபேசன் ரவியைக் காண மருத்துவமனைக்கு வருகிறான். வைரங்களைப் பற்றிக் கேட்கிறான். ரவி சரியான தகவல் ஏதும் சொல்லாததால், அவனைக் கொன்று விடுகிறான். சபேசன் வைரங்களைத் தேடுவதற்காக ரவியின் வீட்டிற்குள் நண்பனாக நுழைகிறான். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்கள் கதையின் முடிவைக் குறிக்கிறது. நடிப்பு
இசை அமைப்பு
இப் படத்தின் இசை அமைப்பாளர் சம்பத் செல்வன். இப் படத்தின் 5 பாடல்களை வைரமுத்து, தாமரை, ந. முத்துக்குமரன், ராபர்ட் மற்றும் அமீர்ஜான் எழுதியுள்ளனர்.இந்த திரைப்படத்தின் பாடல்கள் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டது..[6][7]
விமர்சனம்பாலாஜி பாலசுப்ரமணியம் இப்படத்திற்கு நான்குக்கு இரண்டு புள்ளிகள் கொடுத்துள்ளார். திறமையான நடிகர்கள் இருந்தும் வலுவான திரைக்கதை இல்லாததால் படத்தின் விறுவிறுப்பு குறைகிறது என்று குறிப்பிட்டுள்ளார்..[5] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia