சிலப்பதிகாரம் (அரும்பதவுரை)செய்யுளில் காணப்படும் அரிய சொற்களுக்கு மட்டும் விளக்கம் தரும் உரையை ‘அரும்பதவுரை’ என்பர். இந்த வகையில் நமக்குக் கிடைத்திருக்கும் மிகப் பழைய அரும்பதவுரை சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்டுள்ள உரையாகும். எனவே அரும்பதவுரை என்றாலே அது இந்தச் சிலப்பதிகார அரும்பதவுரையைக் குறிக்கும் சிறப்புச் சொல்லாக மாறிவிட்டது. சிலப்பதிகாரம் நூலுக்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை பெரிதும் போற்றப்படுகிறது. இவரது உரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள உரையைப் பதிப்பாளர்கள் அரும்பத உரை என்கின்றனர். இந்த அரும்பதவுரையில் மேற்கோளாகக் குறிப்பிடப்பட்டுள்ள அதற்கும் முந்திய உரை ஒன்றும் உண்டு. சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதும் அடியார்க்கு நல்லார் நாடகம் பற்றிய ஒவ்வொரு தொடருக்கும் அரும்பதவுரையை மேற்கோள் காட்டியே உரை எழுதுகிறார். இதனால் இசை பற்றிய செய்திக்குப் பழமையான சான்றுகள் அரும்பதவுரையில் உள்ளனவே எனத் தெரிகிறது. அடியார்க்கு நல்லார் மேற்கோள் காட்டிய அரும்பதவுரைச் செய்திகள்அடியார்க்கு நல்லார் ‘எனக் காட்டுவர் அரும்பதவுரையாசிரியர்’ என்னும் குறிப்புடன் காட்டும் அக்காலச் சமுதாயச் செய்திகள் இவை. [1]
கருவிநூல்
அடிக்குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia