சிவசங்கரிசிவசங்கரி (பிறப்பு: அக்டோபர் 14, 1942) ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் நாவல், சிறுகதை, பயணக் கட்டுரை, இலக்கியக் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்குகிறார். 1993 இலிருந்து "இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு" என்ற செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறார். இவரது 150 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல்கள், 35 நாவல்கள், 13 பயணக் கட்டுரைத் தொகுப்புக்கள், 7 கட்டுரைத் தொகுப்புக்கள், 2 வாழ்க்கைச் சரிதங்கள் ஆகியவை வெளியாகியுள்ளன. வாழ்க்கைச் சுருக்கம்சிவசங்கரி எழுத்தாளர் ஆவதற்கு முன்னர் நேஷனல் சிட்டி வங்கியில் மக்கள் தொடர்பு அலுவலராகப் பணியாற்றினார்.[1] அவர் கணவர் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் மண்டல மேலாளராகப் பணியாற்றியவர். சிவசங்கரி மாமனார் விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி என்னும் சிற்றூரில் தொடங்கிய தொழிற்சாலை கவனித்துகொள்வதற்காக சிவசங்கரியும் அவர் கணவரும் தமது வேலைகளைத் துறந்துவிட்டு அவ்வூருக்குச் சென்று வாழ்ந்தனர். நடிகையும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான ஜெ. ஜெயலலிதா இவருக்குத் தோழியாவார்.[1] எழுத்துலகில்இவரது முதல் சிறுகதை "அவர்கள் பேசட்டும்" - குழந்தையில்லாத இளம் தம்பதியின் மெல்லிய உணர்வுகளைச் சித்தரிக்கும் கதை, 1968 மே 12 ஆம் நாளிட்ட கல்கி இதழில் பிரசுரமாகி, எழுத்துலகில் பிரவேசித்தவர்.[1] இரண்டாவது சிறுகதை "உனக்குத் தெரியுமா?" - ஒரு குடிகாரனைப் பற்றிய கதை, 'ஆனந்த விகடன்' பத்திரிகையில் பிரசுரமானது. அதன்பின் பல சிறுகதைகள், தொடர்கதைகள், குறுநாவல்கள், வெளிநாட்டு அனுபவங்கள், கட்டுரைத் தொடர்கள் என எழுதியிருக்கிறார். விருதுகள்
படைப்புகள்புதினங்கள்
குறும்புதினங்கள்இவரது குறும்புதினங்கள் எட்டுத்தொகுதிகளாக வெளிவந்துள்ளன. தொகுதி 1தொகுதி 2[7]
வாழ்க்கை வரலாறு
பயணக்கட்டுரைகள்
கட்டுரைகள்
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
இலக்கிய ஆய்வு
மேற்கோள்கள்
வெளி இணைப்பு
|
Portal di Ensiklopedia Dunia