சி. ஆர். இராஜகோபாலன்
சி.ஆர்.ராஜகோபாலன் (1957 - 31 ஜனவரி 2022) ஒரு இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த எழுத்தாளர், ஆசிரியர் மற்றும் சூழலியல் ஆய்வாளர். நாட்டுப்புற மற்றும் பழங்குடியினரின் பண்பாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டவர். நாட்டுப்புற ஆய்வு மற்றும் பாரம்பரியம் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். கேரள நாட்டுப்புறவியல் நிறுவனம் மற்றும் கேரள நாடக அகாதெமியின் விருதுகளைப் பெற்றுள்ளார். [1] வாழ்க்கைச் சுருக்கம்ராஜகோபாலன் கேரளாவி்ன் திருச்சூர் மாவட்டத்தின் பெரும்புலிசேரி என்னும் ஊரில் ராம பணிக்கர் மற்றும் நாராயணி அம்மாள் ஆகியோரின் மகனாகப் பிறந்தார்.[2] அவர் சி.என்.என் உயர்நிலைப்பள்ளியில் தனது பள்ளிக்கல்வியையும் திருச்சூர் அரசுக் கல்லூரியில் தனது கல்லூரிப்படிப்பையும் மேற்கொண்டார்.[2] காலிகட் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டார். கேரள வர்மா அரசுக்கல்லூரியில் இணைப்பேராசிரியராகவும் கேரளப் பல்கலைக்கழகத்தில் புல முதன்மையராகவும் இருந்தார்.[3] இந்திய கலாச்சார நிறுவனத்தின் தகுதித்தொகையைப் பெற்று நாட்டுப்புற நாடகத்தின் இன இசை மற்றும் தேசிய அழகியல் என்னும் பல்கலைக் கழக மானியக் குழுவின் முதன்மை ஆய்வுத் திட்டப்பணியை மேற்கொண்டார்.[2] ராஜகோபாலன் திருச்சூரின் நாட்டாராய்வு மையத்தின் இயக்குநராகவும் கேரளப் பல்கலையின் சர்வதேச கேரள ஆய்வியல் மையத்தின் இயக்குநராகவும் பொறுப்பில் இருந்தார்.[4][5] பல நாட்டார் வழக்காற்றியல் நூல்களை எழுதியதோடு பல நாட்டுப்புற இசைத்தொகுப்புகளையும் ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். கிரீஸ், சீனா, போலந்து, இத்தாலி, இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, ரோம், ஜெனீவா மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நாடுகளில் நடைபெற்ற கருத்தரங்கங்களில் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.[2] நாட்டார் ஆய்வுகள், கிரிசி கீதா ஆகிய நூற்களின் தொகுப்பு நூலின் ஆசிரியராக இருந்துள்ளார்.[2] சுற்றுச்சூழல் மாசுபாடுகளுக்கு எதிரான பல இயக்கங்களில் ராஜகோபாலன் ஆர்வமுடன் ஈடுபட்டு பணியாற்றியுள்ளார்.[6] ஜப்பானிய விவசாயியும் தத்துவஞானியுமான மசனோபு ஃபுகுவோகாவின் ஒன் ஸ்ட்ரா ரெவல்யூஷன் என்ற புத்தகத்தின் மலையாள மொழிபெயர்ப்பை வெளியிடுவதில் அவரது ஆதரவு முக்கிய பங்கு வகித்தது.[6] குடும்பம் மற்றும் மரணம்வி.எஸ்.சீத்தல் என்பவர் இவரது மனைவி ஆவார்.[4] இவர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு 31 ஜனவரி 2022 அன்று தனது 64ஆம் வயதில் மரணமடைந்தார்[7] எழுதிய மற்றும் தொகுத்த நூல்கள்டி.சி. புக்ஸின் நாட்டரிவுகள் தொடரில் உள்ள 20 புத்தகங்களில், காட்டறிவுகள் (வன அறிவு புத்தகம்), நாட்டு பக்ஷணம் (உள்ளூர் உணவுகள் பற்றிய புத்தகம்) நாட்டு வைத்தியம் (பாரம்பரிய மருத்துவ நூல்), நாட்டு சங்கீதம் (பாரம்பரிய இசை பற்றிய புத்தகம்), சஸ்யங்களுடே தாவர இனங்கள் (உள்ளூர் தாவரங்கள் பற்றிய தகவல்), நாட்டார் தாவரங்கள் பற்றிய தகவல் ஆகிய நூல்களைத் தொகுத்துள்ளார். கிருஷ் நாட்டறிவுகள் (பாரம்பரிய விவசாய அறிவு நூல்), நாடோடி கைவேலை (நாட்டுப்புற கைவேலை நூல்), பூக்களும் பறவைகளும் (பூக்கள் மற்றும் பறவைகள் பற்றிய புத்தகம்), ஜந்துகளும் நாட்டரிவுகளும் (உள்ளூர் விலங்குகள் பற்றிய புத்தகம்), நீரறிவுகள் (நீர் பற்றிய அறிவு நூல்) மற்றும் புழையுதே நதியின் பெயர் பற்றிய புத்தகம், கோடை மழை, கேரளத்தின் பழங்குடி அறிவை அறுவடை செய்தல், பில்லர்தாளம், நாட்டறிவிந்தே நினைவு, உப்பும் சோறும் நாட்டு சரித்திரம், பிறவி மற்றும் வயல்காலங்கள் ஆகிய நூல்களையும் தொகுத்துள்ளார். விருதுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia