சி. சிவமகராஜா
சின்னத்தம்பி சிவமகராஜா (Sinnathamby Sivamaharajah, இறப்பு: ஆகத்து 20, 2006) இலங்கை அரசியல்வாதியும், பத்திரிகையாளரும் ஆவார். இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த நமது ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியராகவும், தமிழர் விடுதலைக் கூட்டணி, மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் வலிகாமம் வடக்கு பொது அமைப்புகளின் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.[2] சின்னத்தம்பி சிவமகராஜா யாழ்ப்பாணக் குடாநாட்டை மையமாகக் கொண்டு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தி 2002 ஆம் ஆண்டில் "நமது ஈழநாடு" பத்திரிகையை ஆரம்பித்தார். இலங்கைத் தரைப்படையினர் இப்பத்திரிகை நிலையத்தின் மீது 2005 டிசம்பரில் தாக்குதல் நடத்தினர்.[3][4] அக்காலகட்டத்தில் இலங்கையில் ஊடகவியலாளருக்கு எதிராக இடம்பெற்று வந்த அடக்குமுறைகளின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது.[5][6][7] விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகக் குற்றம் சாட்டி இவருக்கு எதிராக மரண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.[8] படுகொலைசிவமகராஜா 2006 ஆகத்து 20இல் அவரது வீட்டில் தெல்லிப்பளையில் வைத்து இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது வீடு இலங்கை இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருந்தது.[9] ஐநாவின் யுனெஸ்கோ நிறுவனம் இப்படுகொலையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தது.[10][11] பன்னாட்டு ஊடகவியலாளர் மன்றம் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அரசைக் கேட்டிருந்தது.[12] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia