சி. தாதுலிங்க முதலியார்ராவ் பகதூர் சின்னகாவனம் தாதுலிங்க முதலியார் (C. Tadulinga Mudaliar) அல்லது சி. தாதுலிங்கம் (1878 – 1954) என்பவர் இந்தியத் தாவரவியலாளர் ஆவர். இவர் சில தென்னிந்தியப் புற்கள் ஒரு கையேடு எனும் புத்தகத்தினை இந்தியத் தாவரவியல் அறிஞர் கா. இரங்காச்சாரியுடன் இணைந்து எழுதினார். இந்த புத்தகம் தாவரவியலில் முதன்மையானதாகக் கருதப்படுகிறது. முதலியார் 1942-43ல் சென்னை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார்.[1] தனிப்பட்ட வாழ்க்கை1878ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில்[2] பிறந்த முதலியார் கோவையில் உள்ள வேளாண் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் இக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார்.[3] முதலியார் 1921ஆம் ஆண்டில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் கே.ரங்காச்சாரியுடன் சேர்ந்து சில தென்னிந்தியப் புற்கள் குறித்த ஒரு கையேட்டை எழுதினார். இது தாவரவியலாளரிடம் பாராட்டைப் பெற்றது.[2] இவர் லின்னியன் சொசைட்டியின் சகாவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு "ராவ்பகதூர்" பட்டம் வழங்கப்பட்டது. அரசியல்1942இல் சென்னை மாநகரத் தந்தையாக வி. சக்கரை செட்டியாரை தொடர்ந்து பொறுப்பேற்றார்.[1] இவர் 1943 வரை மாநகரத் தந்தையாகப் பணியாற்றினார். இவருக்குப் பிறகு சையத் நியாமத்துல்லா இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.[1] இறப்புமுதலியார் 1954இல் தனது எழுபத்தைந்து வயதில் காலமானார்.[4] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia