சீசெல்சில் இந்து சமயம்
சீசெல்சில் வாழும் சிறுபான்மை இந்தியர்கள் இந்து சமயத்தினர் ஆவர்.[1] 2010 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 2,150 பேர் இந்து சமயத்தைப் பின்பற்றுவதாகத் தெரிவித்தனர்.[2] 1901 ஆம் ஆண்டு 19,237 பேரில் 332 குடும்பங்கள் இந்து சமயத்தைப் பின்பற்றியதாகவும் இவர்களில் 3,500 பேர் தமிழர்கள் எனவும் கூறப்பட்டது. இந்து கோவில் சங்கம், நவசக்தி விநாயகர் ஆலயம் ஆகியன மக்களிடையே தங்களின் சமய உணர்ச்சிகளை எழுப்பின. [3] சீசெல்சு இந்து கோயில் சங்கம்சீசெல்சு கோயில் சங்கம் எழுபது ஆண்டுகளாக மக்களின் சமய, பண்பாட்டுக் கூறுகளைப் பாதுகாத்து வருகிறது. காவடி மற்றும் பிற இந்து சமய வழிபாடுகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ஊடகங்களில் ஒலிபரப்படுகின்றன. நவசக்தி விநாயகர் ஆலயம்![]() சீசெல்சில் விநாயகரை முதன்மையாகக் கொண்ட ஒரே கோயில் இதுவே. இங்கே முருகன், சிவன், பெருமாள், துர்க்கை, பைரவர் ஆகிய தெய்வங்களின் சிலைகள் அமைந்துள்ளன. தைப்பூசத் திருவிழாவின் பரவலால் இப்பண்டிகையை இந்துக்களுக்காக அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது இந்நாட்டு அரசு. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia