சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு229A இலக்கம் உடைய சீனக்குடா கிராம அலுவலர் பிரிவு (Chinabay) திருகோணமலை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 525 குடும்பத்தைச் சேர்ந்த 2102 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர். முன்னர் சீனநாட்டவர் கடல் வாணிபத்தின் பொருட்டு திருகோணமலையில் இப்பகுதியில் குடியேறியதாலேயே இப்பகுதியானது சீனக்குடா என்றழைக்கப்படுகின்றது. இன்றும் சீனர்களின் வழித்தொன்றல்கள் இங்கு உள்ளபோதும் பெரும்பாலானவர்கள் இலங்கையர்களுடன் திருமணம் செய்து இலங்கையர்கள் ஆகிவிட்டார்கள்.
கைத்தொழில் வலையம்இலங்கையின் மிக முக்கியமான ஒரு கைத்தொழில் வலையம் இங்கே அமைந்துள்ளது. முழு நாட்டிற்கும் கோதுமைமாவை அரைத்து வழங்கும் பிரீமா நிறுவனத்தின் மாவாலை இங்கேயே அமைந்துள்ளது. அத்துடன் டோக்கியோ சீமெந்து எனும் சீமெந்து நிறுவனமும் தனது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஆலையை சீனக் குடாவிலே வைத்துள்ளது. கைத் தொழில் வேலைகளுக்கு ஆதரவளிக்குமுகமாக திருமலை மாவட்டத்தின் ஒரே விமான நிலையமும் இங்கேயே அமைந்துள்ளது. அத்துடன் இந்தப் பிரதேசம் துறைமுக வசதியையும் கொண்டுள்ளுது. இதன் மூலம் தொழில் பேட்டைக்கு ஆகாயம் மற்றும் கடல் மூலம் பண்டங்களைத் தருவிக்க கூடியதாகவுள்ளது. உசாத்துணைகள்
|
Portal di Ensiklopedia Dunia