சுகார்னோ–அத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம்
சுகார்னோ–அத்தா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Soekarno–Hatta International Airport (TIM); இந்தோனேசியம்: (Bandar Udara Internasional Soekarno–Hatta) என்பது (ஐஏடிஏ: CGK, ஐசிஏஓ: WIII), (SHIA அல்லது சொயேட்டா)[3] இந்தோனேசியாவின் சாவகத் தீவில் ஜகார்த்தா பெருநகரப்பகுதியின் முதன்மையான வானூர்தி நிலையம் ஆகும். இந்த வானூர்தி நிலையம் இந்தோனேசியாவின் முதல் அரசுத்தலைவராக இருந்த சுகார்னோ மற்றும் துணைத் தலைவராக இருந்த முகமது அத்தா ஆகியோரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஐஏடிஏ குறியீடான, சிஜிகே, நகரின் வடமேற்கேயுள்ள செங்காரெங் மாவட்டப் பெயரிலிருந்து பெறப்பட்டுள்ளது. பொதுஇந்தோனேசியர்கள் இந்த நிலையத்தை பொதுவாக செங்காரெங் வானூர்தி நிலையம் என்றே அழைத்தாலும், தாங்கெராங் நிர்வாகப் பகுதியிலேயே உள்ளது. ஜகார்த்தாவின் மேற்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த வானூர்தி நிலையம் 1985-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது; அதுவரை உள்நாட்டுச் சேவைகளுக்கு மத்திய ஜகார்த்தாவிலிருந்த கெமயோரன் வானூர்தி நிலையமும் கிழக்கு ஜகார்த்தாவிலிருந்த அலிம் பெர்தானாகுசுமா பன்னாட்டு வானூர்தி நிலையமும் பயன்படுத்தப்பட்டு வந்தன.[4] கெமயோரான் வானூர்தி நிலையம் பொதுவிடமாக மாற்றப்பட்டது. அலிம் பெர்தானாகுசுமா பன்னாட்டு வானூர்தி நிலையம் (Halim Perdanakusuma International Airport) இன்னமும் இயக்கத்தில் உள்ளது; பெரும்பாலும் மிக முக்கியமான நபர்கள், ஒப்பந்த வானூர்திகள் மற்றும் படைத்துறை இயக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது. வரலாறு1992-இல் இரண்டாவது முனையமும் 2009-இல் மூன்றாவது முனையமும் திறக்கப்பட்டன. ஆனால் 2010-இல் திட்டமிடப்பட்ட 38 மில்லியன்களை விட மொத்த பயணிகளின் தொகை 43.7 மில்லியனை எட்டியது.[5] 2012-இல் பயணிக்கும் மக்கள்தொகை 57.8 மில்லியன் பயணிகளாக உயர்ந்து உலகின் ஒன்பதாவது போக்குவரத்து மிக்க வானூர்தி நிலையமாக விளங்கியது.[1] மேற்சான்றுகள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia