சுக ரஹஸ்ய உபநிடதம்சுக ரஹஸ்ய உபநிடதம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும். முக்திகோபநிஷத்தில் ராமபிரான் ஆஞ்சனேயருக்கு உபதேசித்ததாகக் கூறப்படும் 108 உபநிஷத்துக்களில் இது 37வது உபநிஷத்து. சாமானிய வேதாந்த உபநிடதங்கள் பகுப்பைச் சேர்ந்தது. வியாசருடைய புத்திரரான சுகருக்கு பரமசிவனே உபதேசித்ததும் அதன் பயனாக சுகர் சுகபிரம்மமாகவே ஆனதும் இதனில் சொல்லப்படுகிறது. இதன் இன்னொரு சிறப்பு, நான்கு வேதங்களின் மகாவாக்கியங்களின் பொருள்களும் சுருக்கமாகவும் தெளிவாகவும் இங்கே காணப்படுகிறது. மகாவாக்கியங்களிலுள்ள சொற்களின் பொருள்பிரக்ஞானம் பிரம்ம (ரிக் வேதம்: ஐதரேய உபநிடதம், 5-3)
அஹம் பிரம்ம அஸ்மி (யசூர் வேதம்): பிரகதாரண்யக உபநிடதம், 1-4-10)=
தத் த்வம் அஸி (ஸாம வேதம்: சாந்தோக்ய உபநிடதம், 6-9-4)
அயம் ஆத்மா பிரம்ம (அதர்வ வேதம்: மாண்டூக்ய உபநிடதம், 2)
சொற்பொருளும் உட்பொருளும்மஹாவாக்கியத்தின் பொருளை உணர சொற்களின் 'சொற்பொருள்' (வாச்சியார்த்தம்), 'உட்பொருள்' (லக்ஷ்யார்த்தம்) ஆகிய இரண்டு வகையான பொருளையும் கவனிக்கவேண்டும். த்வம் என்ற சொல்லின் சொற்பொருள் ஐம்பூதங்களாலான உடலும் அதன் புலன் முதலியவைகளும். உட்பொருளோவெனின், உடல், மனது, புலன்கள் இவைகளுக்கபாற்பட்ட ஜீவன். தத் என்ற சொல்லின் சொற்பொருள் உலகை ஆளும் கடவுள்; உட்பொருளோ ஸச்சிதானந்த பிரம்மம். அஸி எனும் சொல், உட்பொருளில் இவையிரண்டும் ஒன்றே என்பதாகும். சுக பிரம்மம்பரமசிவனாலேயே பிரம்மோபதேசம் செய்யப்பட்ட சுகர் தன்னுடையது, தான், என்ற எதுவுமில்லாது, துறந்தெழுந்து, கடவுளை வணங்கி உலகுடன் இரண்டறக்கலந்து மனதளவில் ஐக்கியமாகிவிட்டார். பிரம்மம் என்ற அமுதக்கடலில் மிதப்பவர்போல் துறவியாகச்செல்லும் அவரைப்பார்த்து அவர் தந்தை வியாசர் அவரைப்பின்தொடர்ந்து, பிள்ளையின் பிரிவாற்றாமையினால் 'மகனே' என்று கூவினார். அப்பொழுது அசைவது அசையாதது யாவும், உலகனைத்தும், 'ஏன், ஏன்' என்று எதிரொலி செய்தது. அவ்வொலியைக் கேட்டு வியாசர் தன் புத்திரனின் பிரம்ம அனுபவத்தை உணர்ந்து அதிசயித்தார். பொன்மொழி
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia