சுப்பிரமணியர் ஞானம்சுப்பிரமணியர் ஞானம் என்னும் நூல் 35 பாடல்களை மட்டுமே கொண்ட ஒரு சிறு நூல். நூலின் அமைதியைக் கொண்டு இதனைப் 16 ஆம் நூற்றாண்டு நூல் எனக் கணித்துள்ளனர். [1] [2] மேரு மலையை முதலில் சுற்றி வருபவருக்கு மாங்கனி என்றான் சிவன். பிள்ளையார் அம்மையப்பரைச் சுற்றிவந்து மாங்கனியைப் பெற்றுக்கொண்டான். மயிலில் ஏறிச் சுற்றிவந்த இளையவன் முருகனை மலையரசனாக்கிப் பெற்றோர் மகிழ்ந்தனர். அசுரர் தரும் துன்பத்திலிருந்து தம்மைக் காக்கும்படி முனிவர்கள் முருகனை வேண்டினர். முருகள் அசுரர்களை அழித்து முடித்த நேரத்தில் அகத்திய முனிவர் தனக்கு அருளுரை வழங்கும்படி கேட்டுக்கொண்டார். அப்போது வழங்கப்பட்ட உரை இது என்பது இந்நூல் பற்றிய கதை. பஞ்சாக்கர மந்திரம், பீஜ மந்திரம், சத்தி தியானம் முதலானவை இதில் சொல்லப்பட்டுள்ளன. சதுரகிரி, பொதியமலை முதலான மலைப்பெயர்கள் இப்பாடல்களில்வருகின்றன. அட்டாங்க யோகத்தின் வழியே சிவநிலை கொள்க எனச் சொல்லி நூல் முற்றுப்பெறுகிறது. பாடல் எடுத்துக்காட்டுஒழியாத சுழுமுனையில் ஒடுங்கி நல்ல
வழியான துறையறிந்து மவுனம் கொண்டு
தெளிவான ஓங்கார வடிவேல் கொண்டு
வெளியான பரவெளியில் வாசமாகி
கருவிநூல்
|
Portal di Ensiklopedia Dunia