சுவாதி கொலை வழக்குசுவாதி கொலை வழக்கு என்பது 24 சூன் 2016 அன்று, சென்னை நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையத்தில் சுவாதி எனும் பெண்மணி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கினைக் குறிக்கும்.[1] கொலை விவரம்சென்னையிலுள்ள இன்போசிசு தகவல் தொழினுட்ப நிறுவன ஊழியரான சுவாதி, நாள்தோறும் நுங்கம்பாக்கம் தொடருந்து நிலையத்தில் புறநகர் தொடருந்தில் ஏறி பணிக்கு சென்றுவரும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். சூன் 24 அன்று காலை 6 மணிவாக்கில் தொடருந்திற்காக காத்துக் கொண்டிருந்த வேளையில், இளவயது கொலையாளி ஒருவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளி விவரம்சூலை 1, 2016 இரவு செங்கோட்டைக்கு அருகே மீனாட்சிபுரம் எனும் சிற்றூரில் 24 அகவையுடைய இராம்குமார் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டார். கைதினைத் தவிர்க்க குற்றவாளி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் காவற்துறையால் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.[2][3] கொலைக்கான காரணம்கொலைக்கான காரணத்தை தமிழக காவற்துறை இதுவரை கண்டறியப்படவில்லை. புலனாய்வு விவரம்சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்துகளை அடுத்து, புலனாய்வு செய்யும் பொறுப்பு இரயில்வே காவற்துறையிடமிருந்து சென்னை நகர காவற்துறைக்கு முறைப்படி மாற்றப்பட்டது.[4] பாதுகாப்பு குறித்தான கண்டன விமர்சனங்கள்பெருமளவில் மக்கள் கூடும் ஒரு தொடருந்து நிலையத்தில் கண்காணிப்புக் காமிராக்கள் அமைக்கப்படாதிருந்தது குறித்து குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகள் தமது கண்டன விமர்சனங்களை தெரிவித்தன.[5] பொதுமக்களின் செயற்பாடுகள் குறித்தான விமர்சனங்கள்கொலை நிகழ்வு நடந்த நேரத்தில் அங்கிருந்தோர் கொலையைத் தடுக்கவோ, கொலையாளியைப் பிடிக்கவோ முயற்சி செய்யவில்லை; கொலைத் தாக்குதலுக்குள்ளான பெண்ணைக் காப்பாற்ற முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பன போன்ற குற்றச்சாட்டுகள் குமுகாயத்தின் பல்வேறு அமைப்புகளால் எழுப்பப்பட்டன. அஞ்சலிக் கூட்டங்கள்கொலையைக் கண்டித்து, சென்னை நகரில் அஞ்சலிக் கூட்டங்கள் இடம் பெற்றன.[6] ராம்குமார் மரணம்சுவாதியின் கொலை வழக்கை தமிழக காவல் துறை சரியாக விசாரிக்கவில்லை, பல உண்மைகளை இவர்கள் மறைத்துவிட்டனர். இதனால் இந்த வழக்கை சிபியையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ராம்குமாரின் அம்மா நீதிமன்றத்தில் முறையிட்டார்.[7] இதற்கிடையில் சென்னை புழல் சிறைச்சாலையில் குற்றவாளி என்று கைதுசெய்யப்பட்டிருந்த ராம்குமார் 2016 செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி சிறை வளாகத்தில் இருந்த மின்சார பெட்டியில் கைவைத்து இறந்துவிட்டதாகச் சிறைத்துறையினர் அறிவித்தனர். [8] மேற்கோள்கள்
உசாத்துணைவெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia