சூத்திரம்

சூத்திரம் என்னும் சொல் இலக்கண நூலிலுள்ள பாடலைக் குறிக்கும். இதனை நூற்பா என வழங்குகிறோம்.

நூல் என்னும் சொல் இலக்கண நூலை மட்டும் குறிக்கும்.[1] நூலில் உள்ள பாடல்கள் நூற்பா. சூத்திரம் என்னும் சொல்லைத் தமிழ்ச்சொல் எனலாம். [2]

சூத்திரம் சில எழுத்துக்களால் இயன்று செய்யுள் நடையில் இருக்கும். விரிவாகச் சொல்லவேண்டிய உரையை உள்ளே அடக்கிக்கொண்டிருக்கும். நுட்பமும் ஒட்பமும் கொண்டிருக்கும். அசைக்க முடியாத உண்மைகளைக் கூறும். அளக்க முடியாத அரும்பொருளைக் கொண்டிருக்கும். பலவகையான பயன்களை மொழிக்கு நல்கும். [3] கண்ணாடி நிழல்போல் மொழியின் இயல்பை உள்ளபடியே வெளிப்படுத்தும். [4] மொழிச் செய்திகளை விடுபடாமல் கூறும். காரணம் காட்டியும் எடுத்துக்காட்டுகள் தந்தும் விரித்துரைக்கும். [5] சூத்திரத்தில் சொல்லப்படுவதைக் காட்டுவது காண்டிகை-உரை. [6] சூத்திரம் வெளிப்படையாகச் சொல்லாமல் குறிப்பால் உணர்த்தும் செய்திகளும் உண்டு. (விருத்தி)உரை இதனை வெளிப்படுத்தும். [7]

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. தொல்காப்பியம் மரபியல் 100, 101
  2. சூத்திரம் என்பதையும் தமிழ்ச்சொல்லாகக் கொள்ளலாம். 'இரம்' என்னும் பின்னொட்டு தமிழில் பழமையானதே. ஆயிரம். பாயிரம் போன்ற சொற்களில் அவற்றைக் காணலாம். கோத்து இருப்பது கோத்திரம், ஆர்த்து வருவது ஆத்திரம் ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்க முடியாது – என முண்டிக்கொண்டு மூர்த்து வருவது மூத்திரம். இவற்றைப் போலச் சூழ்ந்து, சூழ்த்து வருவது சூழ்த்திரம் > சூத்திரம்
  3. தொல்காப்பியம் மரபியல் 102
  4. தொல்காப்பியம் செய்யுளியல் 102
  5. தொல்காப்பியம் மரபியல் 104
  6. தொல்காப்பியம் மரபியல் 103
  7. தொல்காப்பியம் மரபியல் 105
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya