செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள்செங்கை வல்லம் குடைவரைக் கோயில்கள் செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள வல்லம் எனும் சிற்றூரில் அமைந்த மூன்று குடைவரைக்கோயில்களைக் குறிக்கும். இவற்றில் ஒன்று பெருமாளுக்கானது.[1] முதல் குடவரை வேதாந்தீசுவரர் எனும் சிவபெருமானுக்கு அமைந்தது. முதல் குடவரைக்கு அடுத்து அமைந்துள்ள இடைப்பட்ட குடைவரை சிவலிங்கத்திருமேனி சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் பின்னப்பட்டுவிட்டதால் வழிபாடு நிறுத்தப்பட்டது. சரிசெய்யும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றிற்கு அடுத்து வடக்கில் தாழ்வான பாறைச்சரிவில் அமைந்துள்ளது கரிவரதராஜப் பெருமாளுக்கான திருக்கோயில்.[1] இக்குடைவரைகள் அமைவதற்கு கொம்பை எனும் பல்லவ ராஜகுமாரியும் சாதாரண குடிமகளும் காரணமாக அமைந்துள்ளனர். [1]
வல்லம் வேதாந்தீசுவரர் திருக்கோயில் பல்லவர் காலத்தில் அமைந்த குடைவரைக்கோயில். வல்லம், குன்றின் மேலிருக்கும் குடைவரையில் அமைந்துள்ளது.[1]
ஸ்ரீ கரிவரதராஜப் பெருமாள் திருக்கோயில் பல்லவர் காலத்தில் அமைக்கப்பட்ட குடைவரைக்கோயில். செங்கற்பட்டு மாவட்டம் , வல்லம் ஊரில் அமைந்துள்ள முதலிரு குடைவரைகளுக்கு அடுத்து தாழ்வான பாறைச்சரிவில் அமைக்கப்பட்ட மூன்றாவது குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளது. பெருமாள் திருக்கோயிலில் விஷ்ணுதுர்க்கை அமைந்துள்ள அரிய அமைப்பு கொண்டது.[1] மேலும் பார்க்கமேற்கோள்கள்வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia