செட்டிக்குளம் படுகொலைகள்
செட்டிக்குளம் படுகொலைகள் (Cheddikulam massacre) என்பது மன்னார் - வவுனியா எல்லையிலுள்ள செட்டிக்குளம் எனும் கிராமத்தில் தமிழ்ப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையினைக் குறிக்கும். இது இலங்கை உள்நாட்டுப் போரின் போது இலங்கை ஆயுதப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தொடர் படுகொலைகளில் ஒன்றாகும்.[1] படுகொலைகள்1984 டிசம்பர் 2 அன்று செட்டிக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இராணுவம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தது. அதிகாலை 05:30 மணியளவில் செட்டிக்குளம் பகுதியை இராணுவம் சுற்றி வளைத்தது. கிராமத்தின் பெரும்பான்மையானோர் இன்னமும் உறக்கத்தில் இருந்தனர். இராணுவத்தினர் வீடுகளில் புகுந்து ஆண்கள் அனைவரையும் 'விசாரணை'க்கெனக் கூட்டிச் சென்றனர்.[2] இவ்வாறாக 52 ஆண்கள் இராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுட்டுக் கொல்லப்பட்டனர். 52 பேரும் அருகில் உள்ள மதவாச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கு கத்திகளினால் குத்திக் கொல்லப்பட்டு வாகனங்களால் மிதிக்கப்பட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்தனர்.[1] நேரடிச் சான்றுகள்செட்டிக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் டி. யேசுதாசன் என்பவர் சாட்சியமளிக்கையில்,[1]
மயில்வாகனம் என்ற வேறொருவர் சாட்சியமளிக்கையில்,[1]
குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia