செந்தொண்டை ஈப்பிடிப்பான்
செந்தொண்டை ஈப்பிடிப்பான்[2] அல்லது தைகா ஈப்பிடிப்பான் [Taiga flycatcher (பைசெடுலா அல்பிசிலா)] என்பது தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு வலசை போகும் குருவி ஆகும். இக்குருவியினம் சைபீரிய தைகா காடுகள் தொடங்கி காம்சட்கா தீபகற்பம் வரையிலும் மங்கோலியாவிலும்[3] இனப்பெருக்கம் செய்கின்றது. இது இந்தியா, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, கம்போடியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் மழைக்காலத்தில் வலசை போகின்றது. இந்தியாவின் மேற்குப் பகுதிகளிலும் வட, வடகிழக்குப் பகுதிகளிலும் இக்குருவியைக் காணலாம்; தமிழ்நாட்டில் அரிதாகவே காணப்படுப்படுகிறது[4]. உடலமைப்பும் அடையாளமும்
கள இயல்புகள்செந்தொண்டை ஈப்பிடிப்பானை மரங்கள் அடர்ந்த தோட்டங்களிலும் காடுகளிலும் காணலாம். பறக்கும் போதே இவை, இரையைப் பிடிப்பதும் இலைகளில் புழுக்களைத் தேடும் போது கதிர்குருவிகளைப் போன்ற செயல்பாட்டினையும் கொண்டது. மரங்களில் உள்ள பொந்துகளில் 4 முதல் 7 முட்டைகள் வரை இடும்[5]. மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால் இவ்வினத்திற்கு ஆபத்து ஏற்படுகின்றது.[6] குரல்ட்ர்ர்ர் (trrr...) என்றும் அழுத்தமான டிக் ... டிக் ... என்றும் குரலெழுப்பும்; குரல் உயர் சுருதியில் அதிர்வொலியாக இருக்கும்.[7] படத் தொகுப்பு
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia