சென்னை இரயில் அருங்காட்சியகம்சென்னை இரயில் அருங்காட்சியகம் (Chennai Rail Museum) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் அமைந்துள்ள ஓர் இரயில் அருங்காட்சியகமாகும். பெரம்பூரிலுள்ள இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள ஒருங்கிணைந்த பயிற்சியாளர் தொழிற்சாலையின் அலங்காரப் பிரிவில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. சென்னை இரயில் அருங்காட்சியகம் அருங்காட்சியகம் 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. இது 6.25 ஏக்கர் (2.53 எக்டேர்) பரப்பளவு கொண்டதாகும். அருங்காட்சியகத்தில் தொழில்நுட்ப மற்றும் பாரம்பரிய கண்காட்சிகள் உள்ளன. இதில் பிரித்தானிய இந்தியப் பேரரசு காலத்தில் பயன்படுத்திய நீராவிப்பொறி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. பழைய ஊட்டி இரயில்கள் போன்றவை வைக்கப்பட்டுள்ளன. இந்திய இரயில்வேயில் காணப்படுகின்ற பழைய மாதிரிகளில் பெரும்பாலானவை வடக்கு பிரித்தானியாவின் பொறியியல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவையாகும்.[1] இந்த சேகரிப்பில் சில இரயில்கள் பல நூற்றாண்டுகளுக்கும் மேலானவையாக உள்ளன.[2] பொம்மை-இரயில் சவாரி வசதியும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதுப்பிக்கப்பட்ட உட்புற கலைக்கூடம் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை நிர்வகித்தும் பராமரித்தும் வருகிறது. வரலாறுமண்டல இரயில் அருங்காட்சியகம் 2002 ஆண்டு மார்ச்சு மாதத்தில் நிறுவப்பட்டது. இரயில்வே வாரியம் அருங்காட்சியக வளர்ச்சியில் வலுவான அக்கறை கொண்டிருந்தது. அதனால் கொல்கத்தா மற்றும் புனேவின் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலைகளுக்கு ஒரு மாதிரியாக இருக்குமாறு சென்னை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டது. முதன்முதலில் 1993-94 ஆம் ஆண்டில் இரயில்வே வாரிய செயலாளர் மற்றும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையின் பொது மேலாளரின் ஆலோசனையின் பேரில் திட்டம் முன்மொழியப்பட்டது. அதைத் தொடர்ந்து அருங்காட்சியகத்தின் எதிர்கால இயக்குநருக்கும் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை இரயில்வே அமைச்சர் நித்தீசு குமாரால் 2002 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அவ்வாண்டே ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி இது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு ஆகத்து 22 ஆம் நாள் 377 வது சென்னை தினத்தை நினைவுகூறும் வகையில் ஆர்.ஆர்.எம் சென்னை இரயில் அருங்காட்சியகம் என மறுபெயரிடப்பட்டது. புதுப்பிக்கப்பட்ட அருங்காட்சியகம், புதிய கலைகாட்சியகங்கள், கலைஞர் மணியம் செல்வன் மற்றும் ஐ.சி.எஃப் பொது மேலாளர் எசு.மணி முன்னிலையில் பத்ம பூசண் விருது பெற்ற பத்மா சுப்ரமண்யம் அவர்களால் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.[3] . கண்ணோட்டம்அருங்காட்சியகத்தில் 6.5 ஏக்கர் (2.6 எக்டேர்) பரப்பளவில் இரண்டு காட்சியகங்கள் உள்ளன, 19 ஆம் நூற்றாண்டின் பல வெளிப்புற பாரம்பரிய கண்காட்சிகள் மற்றும் பொம்மை ரயில் மற்றும் விளையாட்டு மைதானம் பார்வையாளர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.[4] இதன் சேகரிப்பில் உட்புற மற்றும் வெளிப்புற கண்காட்சிகள் உள்ளன. உட்புற காட்சியகங்களில் இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை மற்றும் இந்திய இரயில்வேயின் ஆரம்ப ஆண்டுகளை விவரிக்கும் புகைப்படங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் இரயில்களின் வேலை மாதிரிகள் மற்றும் அரிதான பிரித்தானியா கால கலைப்பொருட்கள இடம்பெற்றுள்ளன. அருங்காட்சியகம் இரண்டாவது தசாப்தத்திற்கான புதிய கண்காட்சிகளின் இருப்பிடமாக அமையும்.[5] நீலின் பந்து டோக்கன் அமைப்பு (ரயில்களுக்கு இடையில் சமிக்ஞை அளித்தது) பற்றிய காணொளியும்,[6] மகாத்மா காந்தி பயணம் செய்த ஒரு இரயில்பெட்டியும் இங்கு இடம்பெற்றுள்ளன.[6] அருங்காட்சியகத்தின் வெளிப்புற கண்காட்சிகளில் 41 ரயில் மாதிரிகள் அடங்கியுள்ளன.[7] 1895 ஆம் ஆண்டு சான் பிளவரால் உருவாக்கப்பட்ட மாதிரி நீராவி உழவு இயந்திம் இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.[8] 1860 ஆம் ஆண்டுகளில் இருந்த இருதளப் பெட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மாதிரிகளை ஆய்வு செய்யும் கார், ஆர்.ஏ. 30 மெட்ரோபொலிட்டன் பெட்டி மற்றும் இந்நிறுவனத் தயாரிப்புகள், கிரேன் எர்குலசு என்ற அவசர நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுபவை மற்றும் சொகுசு பெட்டிகள் போன்றவை அருங்காட்சியகத்தின் அனைத்து பார்வையாளர்களும் அணுகக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளன.[9] அருங்காட்சியகத்தின் கண்காட்சிகளில் உலகெங்கிலும் உள்ள அதிவேக ரயில்களின் சுவரொட்டிகள், இந்திய இரயில்வேயின் வரலாறு மற்றும் இலங்கை, பிலிப்பீன்சு, வியட்நாம் மற்றும் சாம்பியாவிற்காக தயாரிக்கப்பட்ட பெட்டிகளின் மாதிரிகள் ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. மேலும் மும்பை புறநகர் இரயில் வலைப்பின்னல் பெட்டிகளும், இந்தியாவின் பழைய இரயில் வரைபடங்கள், நூற்றாண்டு பழமையான கடிகாரங்கள் மற்றும் டீசல்-நீராவிபொறி இயந்திரங்களின் தொகுதிகள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.[4] வெளிப்புற கண்காட்சிகளில் நீலகிரி மலை இரயில்வே பெட்டிகளின் மாதிரிகள், ஒரு சி.எம். ஆய்வு கார், எம்.சி. டீசல் மற்றும் கலப்பை போன்றவைகளின் மாதிரிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்தில் உலகத் தலைவர்கள், இராயல்டி மற்றும் பிற பிரமுகர்களின் ஐ.சி.எஃப் வருகையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று அடுக்குகளில் இயங்குகின்றன மாதிரி இரயில்கள் ,150 க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் ஐ.சி.எஃப் மற்றும் இந்திய இரயில்வேயின் வரலாற்றை ஆவணப்படுத்துகின்றன. ஐ.சி.எஃப் தொழிற்சாலையின் 50 ஆவது ஆண்டு நிறைவு புகைப்படங்கள் காட்சியகத்தில் இயன் மானிங்கின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. சென்னையின் பூச்சி வெங்கட் என்பவர் மின்னணு முறையில் இவற்றை மீட்டெடுத்துள்ளார். நீலகிரி மலையில் ஒரு காலத்தில் இயங்கிய ஒரு பழங்கால நீராவி இயந்திரம் அருங்காட்சியக நுழைவாயிலில் உள்ளது. அதைச் சுற்றியுள்ள இடங்களில் பசுமையான தாவரங்களும் மற்றும் மூலிகைகளும் அலங்கரிக்கின்றன. . பார்வையாளர்கள் நடை பாதை வழியாக பழங்கால இரயிலை அருகில் கண்டுகளிக்கவும் முடிகிறது/ பார்வையாளர்கள்இந்திய இரயில்வேயின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகம் நிறுவப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் 2001 ஆம் ஆண்டில் தொடங்கியது.அருங்காட்சியகம் ரயில்வே அமைச்சர் நித்தீசு குமாரால் மார்ச் 2002 ஆண்டில் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டு, அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்காக ஒரு இரயில் பயணத்தை உருவாக்கியது. மாதந்தோரும் கிட்டத்தட்ட 5,500 பேர் அருங்காட்சியகத்திற்கு வருகை தருகிறார்கள்.[10] அவர்களில் முதன்மையாக மாணவர்களும் மற்றும் உள்ளூர்வாசிகளும் அடங்குவார்கள்.[4] இந்தியாவின் வளர்ச்சியில் இந்த அருங்காட்சியகத்தின் பங்கு இருந்தபோதிலும், விழிப்புணர்வு மற்றும் விளம்பரம் இல்லாததால் இரயில்வே துறைப் போராடுகிறது.[2][11] 2012 ஆண்டில் 10 வது ஆண்டு விழாவின் போது, அருங்காட்சியகம் விரிவாக்க திட்டங்களை அறிவித்தது.[5] 2017 ஆண்டில் ஆகத்து மாதம் மட்டும் சுமார் 14,792 பேர் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். மேலும் 2016 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் 10,809 பார்வையாளர்கள் வந்திருந்தனர்.[12] உணவகம்அருங்காட்சியகத்தில் 2018 ஆம் ஆண்டு ஆகத்து 31 ஆம் தேதி அன்று ஒரு இரயில் பெட்டிக்குள் உணவகம் திறக்கப்பட்டது.[13] குளிரூட்டப்பட்ட சென்னை விரைவுவண்டி உணவகம் ஐ.சி.எஃப் வழங்கிய ஓர் இரயிலில் இருந்தது. போபாலில் இது போன்ற இரண்டாவது உணவகம் திறக்கப்பட்டது. இந்த உணவகத்தில் சீன உணவு வட மற்றும் தென்னிந்திய உணவு வகைகளை வழங்குகிறது. பெட்டியின் நுழைவாயிலுக்கு செல்லும் பகுதி இரயில்வே தளத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் 64 பேர் ஒரே நேரத்தில் மேசைகளில் அமர வைக்க முடியும்.[14] பெட்டிகளின் உட்புறம் மகாராசாக்களின் விரைவுவண்டி போலவும் டெக்கான் ஒடிசி போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலுள்ள சமையலறை ஒரு மறுபயன்பாட்டு கப்பல் கொள்கலனாகும். பெட்டியின் வெளிப்புறமானது அசுமா மேனன் மற்றும் கலைஞர் குழுவினரால் வரையப்பட்டது. திரையரங்குஅருங்காட்சியகத்தில், 2018 ஆம் ஆண்டு ஆகத்து 15 ஆம் நாளன்று ஒரு சிறிய, குளிரூட்டப்பட்ட திரையரங்கு ஆரம்பிக்கப்பட்டது. திரையரங்கில் 90 பேர் அமரக் கூடிய வசதி உள்ளது. அருங்காட்சியக பார்வையாளர்களுக்கு ஐ.சி.எஃப் மற்றும் இந்திய இரயில்வே பற்றிய திரைப்படங்களைக் காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் காண்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia