சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகள்சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற முக்கிய வழக்குகளில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் பற்றிய தொகுப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன: தியாகராஜ பாகவதர் மீதான கொலை வழக்கு![]() வழக்கு:1944 நவம்பர் 7ல் லட்சுமிகாந்தன் என்ற முன்னால் பத்திரிக்கையாளர் தன் வக்கீல் ஒருவருடைய வீட்டுக்குச் சென்றான். அவர் இருப்பது வேப்பேரி. அங்கிருந்து புரசவாக்கத்திலிருந்த தன் வீட்டுக்கு ஒரு ரிக் ஷாவில் திரும்பி வரும்போது சிலர் அந்த ரிக் ஷாவை வழிமறித்து அவனைத் தாக்கிக் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டனர். புரசைவாக்கம் தாணா தெரு அருகில் இந்த நிகழ்ச்சி நடந்தது. அவனுடைய ரத்தப்போக்கு காரணத்தால் அடுத்த நாள் காலை மரணமைடந்தான். இதன் காரணமாக பிரித்தானிய போலீஸ் எட்டுப் பேரை கைது செய்து கொலை வழக்குத் தொடர்ந்தது சமச்சீர் கல்வித் திட்டம் தொடர்பான வழக்குபின்புலம்: 2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே தரமான கல்வி வழங்கிடும் சமச்சீர்க் கல்வி மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்ட்டல் பாடத்திட்டங்கள் ஆகிய 4 பாடத்திட்டங்களுக்கும் பொதுவான ஒரு கல்வித் திட்டமான சமச்சீர் கல்வித் திட்டத்தை கொண்டு வரப்படும் என்று அறிவித்தது. 2011 ல் பதவியேற்ற அதிமுக தலைமையிலான அரசு பதவியேற்றபின் முதலாம் வகுப்பு மற்றும் ஆறாம் வகுப்பு தவிர்த்து ஏனைய வகுப்புகளுக்கு இவ்வருடம் சமச்சீர்கல்வியை அமல்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தது. சமச்சீர் கல்வியை நிறுத்திவைக்கும் அரசின் முடிவை எதிர்த்து பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சமச்சீர் கல்விக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதாடினார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.நவநீதகிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட்டு மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள். தீர்ப்பு: உசாத்துனைகள்அன்று தமிழகமே கொந்தளித்து வென்ற வழக்கு[தொடர்பிழந்த இணைப்பு] மேற்கோள்கள் |
Portal di Ensiklopedia Dunia