செபஸ்தியான் செபமாலைகுழந்தை செபமாலை என அழைக்கப்படும் செபஸ்தியான் செபமாலை (பிறப்பு: மார்ச் 8, 1940) ஈழத்து எழுத்தாளரும், நாடக, நாட்டுக்கூத்துக் கலைஞருமாவார். இவற்றை விட ஆசிரியர், கவிஞர், நாடகாசிரியர், நெறியாளர், பாடகர், இசையமைப்பாளர், சிறந்த சொற்பொழிவாளர் என்று பல்வேறு திறமைகளைக் கொண்டவர். வாழ்க்கைக் குறிப்புமன்னார் மாவட்டம் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் முருங்கன் என்ற ஊரில் வசித்து வரும் செபஸ்தியான் செபமாலை அவர்கள் “குழந்தை" எனும் பெயரில் அறிமுகமானவர். ம. செபஸ்தியான், மு. செபமாலை ஆகியோரின் புதல்வர். செபமாலை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தில் பாடசாலைக் கல்வியைப் பெற்றார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியர் பயிற்சி பெற்றார். அல்லைப்பிட்டி பாடசாலை ஆசிரியராகத் தனது பணியை ஆரம்பித்து, 40 ஆண்டு சேவையின் பின்னர் ஓய்வுபெறும் போது முதலாந்தர அதிபராக பதவி வகித்து வந்தார். இவரின் மனைவி றோஸ்மேரி. பிள்ளைகள் - செ. லூந்துநாயகம், செ. இன்பராசா, செ. அன்புராசா, செ. திருமகள், செ. மலர்விழி, செ. கயல்விழி. கலைத்துறைஇவரின் தந்தையார் நன்கு மத்தளம் வாசிக்கும் அண்ணாவியார். இவருடைய மூத்த சகோதரன் சீமான் பாடகர். அடுத்தவர் சந்தியோகு (ரத்தினம்) நடிகர். வில்லன் பகுதிகளை நடித்தவர். அந்தோனிப்பிள்ளை நடிகர். மாசிலாமணி பாடகராக, குணசித்திர நடிகராக விளங்கினார். யேசுதாசன் தந்தையாரின் வழிவந்து, பக்கவாத்தியத்தினை ஒரேநேரத்தில் பல இசைக் கருவிகளை இசைப்பவர். வேதநாயகம் ஓவியக் கலையில் வல்லவர். நாடக ஒப்பனைகளுக்கு மெருகூட்டியவர். இத்தகைய பின்னணியில் 50களிலே முருங்கன் மகா வித்தியாலயத்தில் மாணவனாக இருந்த காலத்தில் பாடசாலையின் இசை, நாடக நிகழ்ச்சிகளில் பங்குபற்றித் தனது ஆற்றல்களை வெளிப்படுத்தினார். பாடசாலையில் தொடங்கிய குழந்தையின் கலைப்பயணம் கொழும்புத்துறை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையிலும் அதன் பின்னர் ஆசிரியராக வெளியேறிய பின்னரும் வேகமாக வளர்ச்சியடைந்தது. மேடை நாடகங்கள்இவரால் எழுதி, தயாரித்து மேடையேற்றப்பட்ட நாடகங்கள் பின்வருமாறு:
இலக்கியத்துறைஇலக்கியத்துறையில் இவரின் ஈடுபாடு 1955 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. இவரது முதல் ஆக்கமான “அறப்போர் அரைகூவல்” எனும் கவிதை இலங்கை வானொலியில் 1963 ஆம் ஆண்டு முதலில் ஒலிபரப்பானது. அதிலிருந்து இலக்கியம், கலை இலக்கியம், நாடகம், கவிதை என இலங்கை வானொலியிலும், தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் எழுதி வருகின்றார். இத்தகைய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆக்கங்கள் வானொலி, பத்திரிகைகளில் ஒலிபரப்பாகியும், வெளியாகியுள்ளன. எழுதிய நூல்கள்இவரால் இதுவரை எழுதி, வெளியிடப்பட்டுள்ள நூல்களின் விபரம் பின்வருமாறு:
கௌரவங்களும், விருதுகளும்அரச நிறுவனங்கள்இவரின் இத்தகைய சேவைகளைக் கருத்திற்கொண்டு அரச நிறுவனங்கள் வழங்கியுள்ள கௌரவங்களும், விருதுகளும் வருமாறு:
அரச சார்பற்ற நிறுவனங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia