செய்தியாளர்
நாளிதழ்கள், பருவ இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் போன்றவைகளுக்குச் செய்திகளைச் சேகரித்துத் தொகுத்துத் தரும் பணிகளைச் செய்பவர்கள் செய்தியாளர், நிருபர் அல்லது பத்திரிக்கையாளர் (journalist) எனப்படுகிறார்கள். செய்தி நிறுவனங்கள் இத்தகைய நிருபர்களை பல்வேறு இடங்களில் பணி நிமித்தம் செய்து உடனடியாக செய்திகளை சேகரித்து தங்களது ஊடகங்களின் (media) மூலம் மக்களுக்கு கொண்டு செல்வார்கள். இவர்கள் நேர்காணல், கவனித்தல், ஆய்வுசெய்தல் மூலம் செய்திகளைச் சேகரிப்பார்கள். தேர்ந்த செய்தியாளர்களாவதற்கு உலகில் பல்வேறு நாடுகளிலும் பட்டப்படிப்புகளும் பட்டயப்படிப்புகளும் உள்ளன. செய்தியாளர் வகைகள்செய்தியாளர்களை அவர்கள் பணியின் இயல்பு, பணியமைப்பு, தொழில் திறன் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தலாம். இயல்பு வகைகள்செய்தியாளர்கள் செய்யும் பணியின் இயல்பை ஒட்டி அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.
பணி வகைகள்செய்தியாளர்கள் பணியை வைத்தும் அவர்களை 4 வகையாகப் பிரிக்கலாம்.
தொழில் திறன் வகைகள்செய்தியாளர்கள் தொழில் திறனை வைத்து அவர்களை 3 வகையாகப் பிரிக்கலாம்.
செய்தியாளருக்கான பண்புகள்செய்தியாளர் சிறந்த செய்தியாளராகத் திகழ வேண்டுமானால் அவரிடம் கீழ்காணும் தகுதிகள்/பண்புகள் இருக்க வேண்டும்.
செய்தியாளரின் கருவிகள்ஒவ்வொரு தொழிலையும் திறமையாகச் செயல்படுத்த அதற்கென சில கருவிகள் தேவைப்படுகிறது. செய்தியாளருக்கும் அது போன்று சில கருவிகள் தேவையாக உள்ளது.
தமிழ்நாட்டில் செய்தியாளருக்கான சலுகைகள்தமிழ்நாட்டில், சென்னையிலுள்ள தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் அவர்களால் ஒவ்வொரு பத்திரிகை நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர், ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள் , 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள் ஆகியோர்களுக்கு செய்தியாளர் அட்டைகளை அளிக்கிறது. சென்னையில் ஒரு நாளிதழுக்கு 9 செய்தியாளர்கள், 2 புகைப்படக்காரர்கள் மற்றும் பிற மாவட்டங்களில் 2 செய்தியாளர்கள், 1 புகைப்படக்காரர் ஆகியோர்களுக்கு பத்திரிகையாளர் அங்கீகார அட்டை அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அங்கீகார அட்டை பெற்ற செய்தியாளர்கள் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம், 50 சதவிகித ரயில் கட்டண சலுகை போன்றவைகளைப் பெற முடியும். மேலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் அளிக்கப்படும் வீடுகள், வீட்டிற்கான காலிமனைகள் போன்றவைகளை பத்திரிகையாளர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் பெற முடியும். |
Portal di Ensiklopedia Dunia