செல்லக்கண்ணு
செல்லக்கண்ணு (sellakkannu) 1995 ஆம் ஆண்டு விக்னேஷ் மற்றும் யுவராணி நடிப்பில், தேவாவின் இசையில், என். ரத்னம் இயக்கத்தில் வெளியான தமிழ் காதல் திரைப்படம்.[1][2][3] கதைச்சுருக்கம்உறவினர்களான செல்லக்கண்ணு (விக்னேஷ்) மற்றும் சந்திரா (யுவராணி) இருவரும் சிறுவயது முதல் ஒருவரையொருவர் விரும்புகின்றனர். வெளியூரில் படித்துவிட்டு ஊருக்குத் திரும்பிவரும் சந்திராவும் செல்லக்கண்ணுவும் காதலிப்பது அவர்களது பெற்றோர்களுக்குத் தெரியவருகிறது. செல்லக்கண்ணுவின் தந்தை தண்டபாணியும் (ராதாரவி) சந்திராவின் தந்தை தங்கவேலுவும் (லிவிங்ஸ்டன்) அவர்களுக்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கின்றனர். அதே ஊரைச் சேர்ந்த கைலாசத்தின் (விஜய் கிருஷ்ணா) மகன் ராஜவேல் (பிருத்விராஜ்) செய்த தவறுக்காக கிராமத் தலைவரான தண்டபாணி அவனைத் தண்டிக்கிறார். இதற்கு பழிவாங்க எண்ணும் கைலாசம் மற்றும் ராஜவேல் இருவரும் தண்டபாணிக்கும் தங்கவேலுவிற்கும் பகையை உருவாக்கத் திட்டமிடுகின்றனர். அவர்கள் திட்டப்படி தங்கவேலுவை ஒரு பிரச்சனையில் சிக்கவைக்கின்றனர். தான் நிரபராதி என்று தங்கவேலு சொல்வதை நம்பாமல் தங்கவேலுவிற்கு பஞ்சாயத்தில் தண்டனை வழங்குகிறார் தண்டபாணி. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு திருமணம் நிறுத்தப்படுகிறது. இதையடுத்து நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் அந்த ஊரின் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தண்டபாணியை எதிர்த்துப் போட்டியிடும் தங்கவேல் தோற்றுவிடுகிறார். இதனால் அவர்களுக்கிடையிலான பிரிவு இன்னும் அதிகரிக்கிறது. மேலும் கோபமடையும் தங்கவேல் தன் மகள் சந்திராவை ராஜவேலுவிற்குத் திருமணம் செய்ய முடிவுசெய்கிறார். இறுதியில் ராஜவேலுவின் மோசமான நடவடிக்கைகளைப் பற்றி தங்கவேலுவிற்குத் தெரியவருகிறது. இதை அறிந்து மனம் மாறும் தங்கவேலு, தண்டபாணியின் உதவியுடன் அந்த திருமணத்தை நிறுத்துகிறார். அதன் பின் செல்லக்கண்ணுவிற்கும் சந்திராவிற்கும் திருமணம் நடந்ததா என்பது முடிவு. நடிகர்கள்
இசைபடத்தின் இசையமைப்பாளர் தேவா. பாடலாசிரியர் புலமைப்பித்தன்.[4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia