சேக்ரொலாய் பஹுடூர்
ஸேக்ரொலாய் பஹுடூர் (பொருள்; கடலுக்கான நீண்ட பாதை) (Xagoroloi Bohudoor) (அசாமிய மொழி: সাগৰলৈ বহুদূৰ') என்பது ஒரு அசாமிய மொழித் திரைப்படமாகும். இதன் இயக்குநர் ஜானு பருவா. இப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது.[1] கதைஆற்றங்கரை ஓரத்தில் குடிசையில் வசித்துவரும் ஒரு முதியவரும் அவருடைய பேரனுமே படத்தின் முதன்மைக் கதாபாத்திரங்கள். ஆற்றில். மூழ்கி மகனும் மருமகளும் இறந்துவிட்டதால் பேரனை ஆளாக்கும் பொறுப்பு அவருக்கு உள்ளது. கிராமத்து மனிதர்கள் கரையைக் கடக்கப் படகோட்டுவதன் மூலம் முதியவர் வாழ்வுக்கான வருமானத்தை ஈட்டிக்கொள்கிறார். இந்நிலையில் அந்த ஆற்றின் மீது அரசாங்கத்தின் உதவியுடன் மீது பாலம் அமைக்க கிராமத்தினர் முயல்கிறார்கள். அப்படிப் பாலம் அமைந்தால் வாழ்வாதாரம் பறிபோய்விடும் என அஞ்சுகிறார். இந்த வாழ்தாரத்தை இழந்தால் பேரனைக் கரையேற்ற முடியாமல் போய்விடுமோ என்றும் கவலைப்படுகிறார். நகரத்தில் வாழும் மற்றொரு மகன் மூலம் பேரனுக்கு வழிகிடைக்குமா எனப் பார்க்கிறார். அதுவும் இயலாமல் போகிறது. ஆனாலும் நம்பிக்கை இழக்கத் தேவையில்லை என்பதை உணர்த்தி நிறைவுறுகிறது படம்..[2] பாத்திரம்
விருதுகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia