சேரமான் மாரிவெண்கோசேரமான் மாரிவெண்கோ சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். சங்க காலத் தமிழக வரலாற்றிலேயே இவன் காலத்தில்தான் சேர சோழ பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது. பாரி வள்ளலை மூவேந்தரும் சேர்ந்து முற்றுகையிட்டனர் என்பது மற்றொரு நிகழ்ச்சி. ஒருவேளை பாரியின் பறம்புமலையை முற்றுகையிட்டவர்கள் இவர்களாகவும் இருத்தல் கூடும். புலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார். ஞாயிறு, திங்கள், தீ இவற்றின் ஒளிகளை (பகல் வெளிச்சம், நிலா வெளிச்சம், விளக்கு வெளிச்சம்) ஒருசேரக் காண முடியாது. சோழன் சூரியகுலம், பாண்டியன் சந்திர-குலம், சேரன் அக்கினிக்குலம் அதுபோல் இருந்த தமிழ்நாட்டு அரசர்களின் நிலைமை மாறி இவர்கள் பார்ப்பார் வளர்க்கும் முத்தீ போல ஓரிடத்தில் இருந்தார்களாம். புலவர் இவர்களைக்குச் சில அறிவுரைகள் கூறுகிறார்.
அடிக்குறிப்பு
|
Portal di Ensiklopedia Dunia